Connect with us

latest news

நீங்க உருட்டுங்க… மீண்டும் கல்யாண சீன் வச்சிராதீங்கப்பா.. பாக்கியலட்சுமி டீமை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கடுப்பாகி ரூமுக்குள் வருகிறார் ராதிகா. அவர் பின்னாடியே கோபி வர என்ன தலைவலியா என்கிறார். ஆமா இப்போ மண்டையே வெடிக்கிற அளவுக்கு வலிக்குது. கோபி, உன்ன நான் வெளியில கூட்டிக்கிட்டு போனது எனக்கு சப்போர்ட் பண்ணச் சொல்லி ஆனா நீ என்ன பண்ணிட்டு வந்துருக்க எனக் கேட்கிறார்.

ராதிகா, உங்களுக்கும் பாக்கியாவுக்கும் டைவர்ஸ் ஆச்சு. அவங்களை நீங்க ஏன் கேள்வி கேட்குறீங்க? மறக்க முடியலையா இன்னும். அப்போ நான் ஏன் இங்க இருக்கேன் என ராதிகா திட்டிக்கொண்டு இருக்க அப்போ ஈஸ்வரி உள்ளே வருகிறார். 

இப்போ எதுக்கு சண்டை போடுற. கட்டுன புருஷனை எல்லாருக்கும் முன்னாடி திட்டிட்டு வந்து இருக்க என்கிறார். அப்பாடா அப்போ இவர் என் புருஷனு ஒத்துக்குறீங்க. நாளைலேந்து உங்களை அத்தைனு கூப்பிடுவேன். நீங்களும் என்னை மருமகள்னு ஒத்துக்கிட்டீங்களா என்கிறார். இதனால் ஈஸ்வரி அதிர்ச்சி ஆகிவிடுகிறார்.

இதையும் வாசிங்க:விசித்ரா கையால அவார்ட் வாங்குறப்போ வெட்கமா இருந்துச்சு… பிரபல சீரியல் நடிகை சொன்ன ஷாக் தகவல்…

சமையலறையில் பாக்கியா தலைவலியுடன் உட்கார்ந்து இருக்க எழில் காபி போட்டுக் கொடுக்கிறார். இந்த சின்ன கோபி தெளிவா பேசுனான்மா. அவர் எவ்வளோ சொன்னாலும் அம்மா தான் நியாயம்னு பேசுனான் என்கிறார். உடனே அமிர்தா எனக்கு ராதிகா பேசுனதுதான் பிடிச்சிது என்கிறார். உடனே செல்வி, எழில் கூட ஆமாம் என்பது போல பேசுகின்றனர்.

இதை தொடர்ந்து இனியா போனில் பேசிக்கொண்டு இருக்க அங்கு வரும் கோபி உன் மேல எனக்கு ரொம்ப பாசம் என்கிறார். அது தெரியுமே என்க, அப்போ நீ ஏன் எனக்கு சப்போர்ட் செய்யலை என்கிறார். நீங்க பண்ணது தப்புப்பா. அம்மா எவ்வளோ செய்றாங்க இந்த வீட்டுக்கு, அவங்களை நீங்க அப்படி பேசி இருக்க கூடாது என்கிறார்.

இதையும் வாசிங்க:உங்களுக்காக நடிப்பதையே நிறுத்திடுறேன்!. மைக் மோகனை உருகி காதலித்த நடிகை.. அட நிஜமாதாங்க!..

பின்னர் சமையலறையில் பாக்கியா வேலை செய்து கொண்டு இருக்க அங்கு இருக்கும் ராதிகா வந்து பேச்சு கொடுக்கிறார். சொல்றேனு தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க இன்னொரு கல்யாணம் செஞ்சிக்கோங்க. அது தப்பு இல்ல. உங்க பிள்ளைகளும் புரிஞ்சிப்பாங்க என்கிறார்.

இதனை தொடர்ந்து ராதிகா செல்வியை அழைத்து கல்யாணம் செஞ்சிக்கிட்டா சந்தோஷமா இருக்கலாமா எனக் கேட்க அய்யோ நான்லாம் அதை செஞ்சிக்கிட்டு தான் இந்த கஷ்டத்துல இருக்கேன். இல்லனா நிம்மதியா இருப்பேன் என்கிறார். ராதிகா நீங்க கல்யாணம் செஞ்சிக்கிட்டு நிம்மதியா இருக்கீங்களா எனக் கேட்க அவர் அமைதியாக சென்று விடுகிறார்.

இதையடுத்து, நள்ளிரவில் கோபி யோசிக்கிட்டு இருக்க ஈஸ்வரி என்னவென்று கேட்கிறார். இந்த ராதிகா திடீரென பாக்கியாவுக்கு சப்போர்ட் செய்றா என்கிறார். ஆமா ஓவரா பாசம் பொங்குது. கோபி தன்னுடைய நிலைமை தான் மோசம் எனப் புலம்புவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

இதையும் வாசிங்க:அருண்குமார் அட்லி ஆன கதை எப்படி தெரியுமா?!.. இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கா?!…

google news
Continue Reading

More in latest news

To Top