More
Categories: Cinema News latest news

சோப்பு வித்துதான் ஒரு வேலை சாப்பிடுறேன்.! சவுண்ட் சரோஜாவின் தற்போதைய பரிதாப நிலைமை!…

வேல், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, பூஜை , சாமி 2 என தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள துணை நடிகை ஐஸ்வர்யா. இவர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து இருந்த ஆறு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் இவரது சவுண்டு சரோஜா எனும் கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

Advertising
Advertising

அவ்வப்போது ஒரு சில சினிமா படங்களில் மட்டும் நடித்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு தன்னால் முடிந்த உழைப்பை கொடுத்து மக்கள் மனதில் ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு நடித்து விடுவார் ஐஸ்வர்யா.

இவர் அண்மையில் ஓர் பத்திரிக்கை சேனலில் நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு கருத்துக்களை மிகவும் பகிரங்கமாக தெரிவித்தார். அதில் பல தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதில் ஒன்று, தற்போது அவர் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறாராம். யாரேனும் வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும். சீரியல் வாய்ப்பு கூட இப்போது இல்லை. ஆதலால், தற்போது வீடு வீடாக சென்று சோப்பு விற்று வருகிறேன். அதன் மூலம் வரும் வருவாயில் நான் மற்றும் எனது செல்ல பூனைகள் சாப்பிட்டு வருகிறோம் என்று அவ்வளவு பெரிய சோகத்தையும் சிரித்துக்கொண்டே சொன்னார் ஐஸ்வர்யா. மேலும், அவர் யோகா வகுப்பு சென்று வருவதால் அவர் தினமும் ஒருவேளை மட்டும் தன சாப்பிடுவாராம்.

இதையும் படியுங்களேன் – திருமண கோலத்தில் பத்திரிக்கையாளரை அடிக்க துரத்திய ரஜினிகாந்த்.! ப்பா மனுஷன் இப்படி பட்டவரா.?!

இவர் தனது கணவரை பிரிந்து வெகு வருடங்கள் ஆகிவிட்டது. இவரது மகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. தற்போது தனியாக வசித்து வருகிறார் ‘சவுண்ட் சரோஜா’ எனும் ஐஸ்வர்யா.

நேர்காணலின் போது, தொகுப்பாளினியிடமே,  ‘உங்கள் சேனலில் கூட்டி சுத்தம் செய்யும் வேலை இருந்தால் கூட சொல்லுங்கள். நான் செய்கிறேன். அதுவும் வேலைதான். அதை செய்தாலும் சம்பளம் கிடைக்கும்.’  என்று தற்போதைய சோக நிலைமையை கூட மிகவும் பாசிட்டிவ்வாக சிரித்து கொண்டே சொன்னார் ஐஸ்வர்யா. இந்த நேர்காணலை பார்த்தாவது இவருக்கு படவாய்ப்புகள் வருகிறதா? அடுத்தடுத்து நடித்து நம்மை மகிழ்விப்பாரா ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Published by
Manikandan

Recent Posts