More
Categories: Cinema News latest news

கவினை பார்த்து தெறித்து ஓடிய சந்தானம்!.. தைரியமா கிளாஷ் விட்டா முதலுக்கே மோசமாகிடும் பாஸ்!..

’இங்க நான் தான் கிங்கு’ என சொல்லிக் கொண்டு தனது படத்தை கவினின் ஸ்டார் படத்துடன் மோத விடலாம் என்கிற எண்ணத்துடன் மேக் 10 ஆம் தேதி தனது படம் வெளியாகும் என்கிற அறிவிப்பை சந்தானம் வெளியிட்டிருந்தார். ஆனால், தற்போது நிலைமை சரியாக இல்லை என்பதை புரிந்து கொண்டு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளார்.

கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிப்பில் சந்தானம், பிரியாலயா மற்றும் காமெடி நடிகர்கள் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு திரைப்படம் மே 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி எல்லாம் நடைபெற்றது.

Advertising
Advertising

இதையும் படிங்க: அரண்மனை 4 அலையில் சிக்கி சின்னாபின்னமான சிவகார்த்திகேயன்!.. எதுக்கு தம்பி இந்த வேண்டாத ரிஸ்க்!

அந்த நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் வழக்கம் போல பலரையும் கலாய்த்து பேசி வந்தார். பத்திரிகையாளர்கள் மூளையிலிருந்து யோசிக்கிறீர்களா அல்லது முதுகிலிருந்து யோசிக்கிறீர்களா என்றெல்லாம் கேட்டு கலாய்த்து இருந்தார். இந்நிலையில், சந்தானம் மூளையிலிருந்து யோசித்து கவின் படமான ஸ்டார் படத்துடன் கிளாஷ் விட்டால் காணாமல் போய்விடுவோம் என்பதை அறிந்து கொண்டு மே 17-ஆம் தேதி தனது படத்தை வெளியிடும் முடிவுக்கு தற்போது வந்துள்ளார்.

இளன் இயக்கத்தில் கவின், பிரீத்தி முகுந்தன் மற்றும் அதிதி போஹங்கர் போன்ற பிரபலங்கள் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள ஸ்டார் திரைப்படம் வருமே பத்தாம் தேதி வெளியாகிறது. அந்த படத்துக்கு போட்டியாக அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு, அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ரசவாதி உள்ளிட்ட படங்கள் போட்டியாக வெளியாகின்றன.

இதையும் படிங்க: அந்த நடிகருடன் ஷூட்டிங்!.. எம்.ஜி.ஆருக்கே அல்வா கொடுத்த சரோஜாதேவி!.. நடந்தது இதுதான்!..

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போட்டியிலிருந்து நடிகர் சந்தானம் நைசாக கழண்டு கொண்டு பெரிய போட்டியில்லாத மே 17ஆம் தேதி தனது படத்தை வெளியிட்டு முடிவுக்கு வந்திருக்கிறார்.

சந்தானத்தின் இந்த திடீர் முடிவுக்கு கவின் மட்டும் காரணம் இல்லை என்றும் கடந்த வாரம் வெளியான அரண்மனையின் 4 திரைப்படம் மக்களுக்கு பிடித்துப்போய் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கவினின் ஸ்டார் படத்துக்கே இந்த வாரம் கஷ்ட காலம் தான் என்றும் நாமும் ஏன் தேவையில்லாமல் வந்து தலையைக் கொடுப்பான் என சந்தானம் ஒதுங்கி விட்டதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரகுமான் வச்ச குறி இளையராஜாவுக்கு இல்லையாம்!… அப்போ அது யாருக்குத் தெரியுமா?

Published by
Saranya M

Recent Posts