Connect with us
nayan

Cinema News

கோடியை மட்டும் சுருட்ட தெரியுது! எங்க நிலைமையையும் யோசிங்க நயன் – பரிதவிக்கும் படக்குழு

Actress Nayanthara: தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கோலோச்சி வரும் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா இப்போது  பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் ஸ்டைலிஷான பெர்ஃபாமன்ஸ் செய்து ரசிகர்களை கவர்ந்தார்.

இதன் மூலம் பாலிவுட்டிலும் நயன்தாரா ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக காணப்படுகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இரண்டாவது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியானார்.

இதையும் படிங்க: எங்களுக்கு கோமணம்… அவருக்கு மட்டும் ஷாட்ர்ட்ஸா?… இயக்குனரை வெளுத்து வாங்கிய விக்ரம்…

இப்படி தொடர்ந்து பல நல்ல படங்களில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறிய நயன் இன்று ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறியிருக்கிறார். தற்போது அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நயன்.

ராஜா ராணி படத்திற்கு பிறகு ஜெய், நயன், சத்யராஜ் ஆகியோர் சேர்ந்து நடிக்கும் படமாக அன்னப்பூரணி திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படப்பிடிப்பில் இருக்கும் போது திடீரென நயன்தாரா  நான் நான்கு மணிக்கெல்லாம் வீட்டுக்கு போகவேண்டும், என் குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்று சென்று விடுகிறாராம்.

இதையும் படிங்க: சைடு ஆங்கிள் சும்மா அள்ளுது!.. சமந்தா அழகில் வாயடைத்து போன ரசிகர்கள்…

இதனால் தயாரிப்பாளர்கள் சைடில் நஷ்டம் ஏற்படுவதாகவும் தெரிகிறது. கோடி கோடியாய் சம்பளம் வேண்டும் என்று மட்டும் சொல்லும் நயன் தயாரிப்பாளர்களின் நிலைமையையும் கொஞ்சம் யோசிக்க வேண்டும் என்று படக்குழுவினர் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

இந்த  மாதிரி வழக்கத்தைத்தான் சமீபகாலமாக எல்லா திரைப்படங்களிலும் கொண்டுள்ளாராம் நயன். இதில் அடுத்ததாக மணிரத்தினம் படத்திலும் நடிப்பதாக ஒரு செய்தி வந்தது. ஆனால் இதை மணிரத்தினம் எப்படி சம்மதிப்பார் என்றும் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: எனக்கு மட்டும் நான்-வெஜ், தொழிலாளர்களுக்கு வெறும் முட்டையா..? ஷூட்டிங்கில் மல்லுக்கு நின்ற எம்.ஜி.ஆர்..!

google news
Continue Reading

More in Cinema News

To Top