எத்தனை ஹீரோக்கள் நடிக்க வேண்டிய படம் தெரியுமா? ஆனால் சொன்ன காரணம்.. அதான் லேடி சூப்பர் ஸ்டார்

Published on: March 7, 2024
nayan
---Advertisement---

Actress Nayanthara: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக கோலோச்சி வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா என்ற படத்தின் மூலம் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமான நயன்தாரா அந்தப் படத்தின் சமயத்தில் இப்பேற்பட்ட உயரத்தை அடைவார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தாவாணி பாவாடையுடன் பக்கா கிராமத்து லுக்கில் அந்தப் படத்தில் நடித்திருப்பார்.

ஆனால் அடுத்து இரண்டாவது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியானார். சந்திரமுகி திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல பேரை பெற்றுக் கொடுத்தது. அதிலிருந்தே நயன்தாராவின் மார்கெட்டும் கொஞ்சம் கொஞ்சமாக உயரத்தொடங்கியது. இவர் நடித்த பெரும்பாலான படங்களில் கொஞ்சம் க்ளாமரை ஓவராகத்தான் வெளிப்படுத்தி நடித்திருப்பார். கிடைத்த கதைகளில் எல்லாம் நடித்தார் நயன்.

இதையும் படிங்க:பாலிவுட்டை நோக்கி நகரும் ரஜினி! அடுத்த படத்திற்கான பக்கா ஸ்கெட்ச்.. இதுதான் காரணமா?

கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த நயனுக்கு ஒரு பக்கா ஸ்டைலிஷான கதாபாத்திரமாக மாறியது பில்லா திரைப்படம்தான். அதில் பிகினி உடை அணிந்து நடித்தாலும் அதையும் மறக்க வைத்தது நயனின் ஸ்டைலான நடிப்பு. சொல்லப்போனால் பில்லா திரைப்படம் தான் நயனுக்கு ஒரு பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்தது. அதன் பிறகு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரியாக மாறினார் நயன்.

இந்த நிலையில் பெண்களை மையப்படுத்தி அமையும் கதைகளில் தொடர்ந்து நடித்து வந்தார் நயன். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் அறம் படத்தை கூறலாம். துணிச்சலான கலெக்டர் கேரக்டரில் உண்மையிலேயே ஒரு கலெக்டர் லுக்கில் நடித்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார் நயன். அந்தப் படம் அவருக்கு பெரிய வரவேற்பை அள்ளிக் கொடுத்தது.

இதையும் படிங்க: எனக்கு பட்டை நாமம் போட்டாங்க!. உனக்கு நாமக்கட்டி!.. சிவக்குமாரை அதிரவைத்த சிவாஜி!..

இந்த நிலையில் அறம் படத்தின் இயக்குனர் கோபி நயினாரின் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அறம் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது முன்னனி நடிகர்களாம். எத்தனையோ நடிகர்களிடம் போய் கதை சொல்லியிருக்கிறார் கோபி நயினார். ஆனால் அவர்களுக்கு இந்தக் கதையில் ஆர்வம் இல்லையாம். காரணம் இந்த கதை ஒரு டாக்குமெண்ட்ரி மாதிரி இருந்ததாம். ஆனால் நயன்தாராதான் துணிந்து நடிக்க முன்வந்தார் என கோபி நயினார் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.