More
Categories: Cinema News latest news

வடிவேலுவை யூஸ் பண்ணிட்டு.. அவர் மீதே பழி போடலாமா? நடிகையிடம் பாயும் பயில்வான் ரங்கநாதன்..

நடிகை பிரேமபிரியா ராஜா ராணி உள்ளிட்ட பல நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் துணை கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் வடிவேலுவால் தான் தன் வாழ்க்கை வீணாகிவிட்டது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பயில்வான் ரங்கநாதன் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். நடிகை பிரேமபிரியா நல்ல நடிகை தான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் என் வாழ்க்கையை வடிவேலு கெடுத்துவிட்டார் என்று அவர் கூறுவது மிகவும் தவறு. இது ஒரு நன்றி கெட்ட செயல்.

Advertising
Advertising

இதையும் படிங்க- வடிவேலு என் காலில் விழுந்தார்!. பல வருடங்கள் கழித்து உண்மையை சொன்ன பரத்வாஜ்!..

வடிவேலுவின் காமெடி காட்சிகளில் நடித்ததால் தான் இவர் பிரபலமானார். இன்று வரை அவர் ஒரு சில படங்களிலும், சீரியல்களிலும் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார். பிறகு ஏன் வடிவேலு மீது பொய் குற்றச்சாட்டுகளை, அவதூறுகளை பரப்பி வருகிறார்.

இது போன்று பெரிய நடிகர்கள் மீது புகார் கூறிக்கொண்டிருந்தால், இயக்குநர்கள் படத்தில் வாய்ப்பு தர தயங்குவார்கள். இப்படி பேசுவது சில நாட்களுக்கு விளம்பரத்தை தேடி தரும். ஆனால் பட வாய்ப்புகளை கிடைக்காது.

இது போன்று குற்றம் சாட்டி வந்தால், அந்த நடிகைகளின் பெயர் தான் கெட்டுப்போகும். சில நாட்களுக்கு முன்பு இதே போல தான் நடிகர் கவுண்டமணி மீது ஷர்மிலி குற்றம் சாட்டினார். ஆனால் கவுண்டமணியுடன் நடித்து தான் ஷர்மிலி பிரபலமானார்.

அவர் இல்லை என்றால் இன்று ஷர்மிலி இல்லை. சாதாரண டான்சராக இருந்த ஷர்மிலிக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து, 50,000 ரூபாய் சம்பளம் கொடுத்து, ஒரு ப்ளாட்டும் வாங்கி கொடுத்தார் கவுண்டமணி. அவரையே இப்படி குறை சொல்வது மிகவும் தவறு பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- தெரிந்தே பாதாள குழியில் குதிக்கும் வடிவேலு!.. எல்லாம் மாமன்னன் ஹிட் கொடுத்த நம்பிக்கை!…

Published by
prabhanjani

Recent Posts