More
Categories: Cinema News latest news

இப்படியெல்லாமா பண்ணுவீங்க? ஹாஸ்டலில் பாய் ஃபிரண்டோடு மாட்டிக் கொண்ட பிரியா பவானி

தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் தனது வாழ்க்கையை தொடங்கிய பிரியா பவானி சங்கர் அதன் பிறகு மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தன் வெள்ளித்திரை நடிப்பை அறிமுகம் செய்தார்.

கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா ,யானை, திருச்சிற்றம்பலம், பத்து தலை போன்ற முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறி இருக்கிறார் பிரியா பவானி சங்கர். தற்போது கமல் நடிப்பில் தயாராகி வரும் இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

priya1

முதல் அங்கீகாரம்

அவருடைய முதல் அங்கீகாரம் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்ததே ஆகும். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து அந்த ஒரே சீரியல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

இந்த நிலையில் தன்னுடைய பாய் பிரண்டை பற்றி ஒரு சில தகவல்களை பிரியா பவானி சங்கர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அவ்வப்போது தனது இன்ஸ்டாவிலும் பாய் பிரண்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வரும் பிரியா பவானி சங்கர் ஒரு சமயம் ஹாஸ்டலில் இருக்கும்போது தனது பாய் பிரண்டுடன் அவுட்டிங் போவதற்காக தயாராகிக் கொண்டு இருந்தாராம்.

priya2

ஹாஸ்டலில் இப்படியா?

அப்போது அவருடைய பாய் ஃப்ரெண்ட் பிரியா பவானி சங்கரின் ஹாஸ்டலுக்குள் காரில் நுழைந்து இருக்கிறார் .இவரும் காரில் ஏறி வெளியே வரும் போது செக்யூரிட்டி கார் கதவை திறக்க சொன்னாராம். அப்போது பிரியா பவானி சங்கரை பார்த்ததும் செக்யூரிட்டி வெளியே விடவில்லையாம். ஆனால் பிரியாவோ “நீ யார வேண்டுமென்றாலும் கூப்பிடு .ஏன் வார்டனை கூட கூப்பிடு. எனக்கு ஒன்னும் கவலை இல்லை. நான் இவருடன் வெளியே போகத்தான் செய்வேன். அதையும் மீறி என்னுடைய பெற்றோர்களிடம் சொன்னாலும் பரவாயில்லை. அவர்களிடம் நான் பேசிக் கொள்கிறேன்” என்று மிகவும் கெத்தாக கூறி வெளியே வந்தாராம்.

இதையும் படிங்க :கேலி கிண்டலுக்கு ஆளான கணவர் – 15 வருட பந்தம்! தலைகீழான நீலிமாவின் வாழ்க்கை

Published by
Rohini