More
Categories: Cinema News latest news

எனக்கு சினிமாவே வேண்டாம்!… கமல்ஹாசனால் தெறித்து ஓடிய நடிகைகள்…

தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவனாக வலம் வருபவர் கமல்ஹாசன். 80 மற்றும் 90களில் அவரின் இளமையான தோற்றம் நடிகைகளுக்கு மட்டுமில்லை.. மற்ற பெண்களுக்கும் அவரை பிடித்துப்போனது. அதாவது, அவரின் ரொமான்ஸ் அப்பீலே பல பெண்களுக்கும் பிடித்துப்போனது. சரியாக சொல்லவேண்டுமென்றால் பெண் ரசிகைகளுக்கு காதல் மன்னனாகவே கமல்ஹாசன் தெரிந்தார்.

Advertising
Advertising

சொந்த வாழ்க்கையில் மட்டுமல்ல, சினிமாவில் நடிக்கும்போதும் நடிகைகளை அவர் டீல் செய்வது திரையில் பார்த்தாலே நமக்கு தெரியும். அந்த நிமிடம் நடிகைகளை தனது சொந்த காதலியாகவே நினைத்துக்கொள்வார். தனது காதலியிடம் உரிமை எடுத்துக்கொள்வது போல் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து பின்னி பெடலெடுப்பார்.

இதனாலேயே அவருடன் நடித்த நடிகைகள் கமல்ஹாசன் என்றாலே தெரித்து ஓடிய காலம் உண்டு. கவுதமி, அம்பிகா, ராதா, ஊர்வசி போன்ற சில நடிகைகள் மட்டுமே கமலுடன் பல வருடங்கள் தாக்கு பிடித்தனர். பல நடிகைகள் ஓட்டம் பிடித்தனர்.

இதில் ஒருவர்தான் குணா படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த ரோஷினி. அவர் நடித்தது அந்த ஒரு படம்தான். கமல் படுத்திய பாட்டால் எனக்கு சினிமா வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு விட்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

அதேபோல், விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் அபிராமி. இப்படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியிலும் சரி, கிணற்றில் அபிராமிக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் காட்சியிலும் சரி கமல் ரசித்து நடித்திருப்பார்.

அதன்பின் 2 படங்களிலும் மட்டுமே நடித்த அபிராமி எனக்கு சினிமா வேண்டாம் எனக்கூறி விட்டு திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா பறந்து சென்றார். பல வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் திரும்பி வந்து சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Published by
சிவா