Connect with us
prem

Cinema History

ஒரே நேரத்தில் காதலி, மனைவி, தங்கை, அம்மாவா? யாருப்பா அந்த நடிகர்? சொல்லமுடியாத கொடுமை

சினிமாவைப் பொறுத்தவரைக்கும் எந்தக் கதாபாத்திரமானாலும் அதை ஏற்று நடிக்கத்தான் செய்யவேண்டும். அதுவும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என ஆசையில் வரும் எவரும் எல்லாவற்றிற்கும் துணிந்து தான் வரவேண்டும். ஏனெனில் சினிமா ஒருவரை தூக்கி உயர்த்தவும் செய்யும் அதே சமயம் ஒரேடியாக காலில் போட்டு மிதிக்கவும் செய்யும்.

prem1

prem1

அந்த வகையில் பிரபல நடிகையான செம்மீன் ஷீலாவை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். சந்திரமுகி படத்தில் நாசருக்கு அக்காவாக வில்லியாக கலக்கியிருப்பவர். அவர்தான் செம்மீன் ஷீலா. முதன் முதலில் பாசம் என்ற திரைப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்திருப்பார். ஆனால் கேரளத்தில் இருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வந்தவர். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றவர்.

இதையும் படிங்க : அப்போ தேவைப்படல! இப்போ மட்டும் தேவைப்படுதா? பயில்வானின் கேள்வியால் பயங்கர அப்செட்டில் ஹன்சிகா

மீண்டும் புரட்சித்தலைவருடன்

அதன் பின்னும் மீண்டும் புரட்சித்தலைவர் படத்தில் இணைந்தார். அதுமட்டுமில்லாமல் பல நாடகங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஒரு முறை கேரளத்தில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் இப்படி ஒரு வரவேற்பை பெறுகிறாரே என்று ராமண்ணா அவரை மலையாளத்தில் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

prem2

prem2

அங்கேயும் அவரின் திறமை பாராட்டப்பெற்றது. அதனை தொடர்ந்து மலையாள நடிகையாகவே மாறிப்போனார். ஏனெனில் தமிழில் செலக்டிவ்வான கதைகளில் மட்டுமே நடிக்கத்தொடங்கினார். மற்றபடி முழு நேர மலையாள நடிகையாகவே இருந்தார்.இப்படி பல மொழிகளில் நடித்து வந்த செம்மீன் ஷீலாவுக்கு அப்பொழுதுதான் செம்மீன் என்ற மலையாள படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

இதையும் படிங்க : போற போக்குல வாய்ப்பு கிடைக்கும் போல..கல்யாணத்துக்கு வந்த பொண்ணுக்கு எம்.ஜி.ஆர் படத்தில் கிடைத்த வாய்ப்பு!..

அந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டதாம். அதிலிருந்தே செம்மீன் ஷீலா என்றே அழைக்கப்பட்டார். ஹிந்தியிலும் வாய்ப்பு வர அவரது குடும்பத்தார் மும்பை பக்கம்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம். 80களுக்கு பிறகு அக்கா, அண்ணி கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார்.

நடிகருடன் ஒரே நேரத்தில்

இந்த நிலையில் பிரபல நடிகர் பிரேம் நசீருடன் ஒரே நேரத்தில் நான்கு படங்களில் செம்மீன் ஷீலா நடித்தாராம். அதுவும் ஒரு படத்தில் காதலியாக, ஒரு படத்தில் மனைவியாக, ஒரு படத்தில் தங்கையாக, ஒரு படத்தில் அம்மாவாக என ஒரே நேரத்தில் நடித்திருக்கிறாராம். அதுவும் சென்னையில் தான் அந்த நான்கு படங்களின் படப்பிடிப்புகளும் வெவ்வேறு ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டதாம். 2 மணி நேர இடைவேளியில் தான் அந்தப் படங்களில் நடித்தாராம்.

prem3

prem3

இது உலக அளவில் இல்லாத சாதனையாக கூறப்படுகிறதாம். ஆனால் செம்மீன் ஷீலாவுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவருக்கு சரிவர வாய்ப்பு கிடைக்காததால் சீரியல்களிலும் கிடைக்கும் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறாராம். இந்த சுவாரஸ்ய தகவலை பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க : ரஜினியாக ஆசைப்படும் சிவகார்த்திகேயன்!.. சண்டையில சட்ட கிழிஞ்சிரும் பரவால்லயா!..

google news
Continue Reading

More in Cinema History

To Top