More
Categories: Cinema News latest news

முதல் படத்திற்கும் கடைசி படத்திற்கும் இப்படி ஒரு ஒற்றுமையா? எந்த நடிகைக்கும் கிடைக்காத ஒன்னு

Actress Shalini: தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகள் இருக்கின்றனர். படங்களில் ஜோடியாக நடித்து பின் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக மாறிய ஏராளமான பிரபலங்கள் இருக்கின்றனர். இவர்கள் வரிசையில் ஒரே ஒரு படத்தில் ஜோடியாக நடித்து பின் இன்றுவரை மகிழ்ச்சியாக வாழக்கூடிய ஜோடி யார் என்றால் அஜித் – ஷாலினிதான்.

ஷாலினியை பொறுத்தவரைக்கும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் ஹீரோயினாக அறிமுகமான பிறகு 5 வருடங்களில் 12 படங்களில் தான் நடித்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: உயிருக்கே உலை வைக்க இருந்த முரட்டுக்காளை திரைப்படம்… ஒரு நொடியில் சுதாரித்த ரஜினிகாந்த்!…

அதன் பின் காதல் கணவரான அஜித்தை கரம் பிடித்தார். இப்போது ஒரு பொறுப்புள்ள குடும்ப பெண்மணியாக குடும்பத்தையும் குழந்தையையும் கவனித்து வருகிறார் ஷாலினி. இதற்கிடையில் இன்ஸ்டாவில் தனக்கென ஒரு பக்கத்தை ஆரம்பித்த ஷாலினி அதில் அஜித்தும் அவரும் இருக்கிறமாதிரியான பல புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்துவருகிறார்.

இந்த நிலையில் ஷாலினி ஹீரோயினாக அறிமுகமான முதல் படம் ‘அனியத்திப்ரவு’ . அந்த படத்தை பாசில் இயக்கியிருந்தார். இதே படம்தான் தமிழில் காதலுக்கு மரியாதை என்ற தலைப்பில் வெளியானது. தமிழிலும் பாசில்தான் இயக்கியிருந்தார்.

இதையும் படிங்க: ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார் போலயே? விவகாரத்துக்கான காரணம் பற்றி மனம் திறந்த சரத்குமாரின் முதல் மனைவி

அதே போல் மலையாளத்தில் ஷாலினி நடித்த கடைசி படம் ‘ நிறம்’. இந்தப் படம் தான் பின்னாளில் பிரியாத வரம் வேண்டும் என்ற தலைப்பில் தமிழில் வெளியானது. இந்த இருபடங்களையும் எடுத்தவர் இயக்குனர் கமல்.

இப்படி ஷாலினியின் முதல் கடைசி படங்களை தமிழிலும் மலையாளத்திலும் இயக்கியவர்கள் ஒரே இயக்குனர் என்பது வேறு எந்த நடிகைக்கும் நடக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

Published by
Rohini

Recent Posts