latest news
விஜய்யை கடத்திச் செல்வேன் – அதிரவைத்த ‘லப்பர் பந்து’ நடிகை சுவாசிகா!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய்க்கு, தமிழ்நாட்டிற்கு இணையாக கேரளாவிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. கேரளாவில் அவரது திரைப்படங்கள் வெளியாகும் நாட்கள் திருவிழா போலக் கொண்டாடப்படும். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட ‘லப்பர் பந்து’ பட நடிகை சுவாசிகா, விஜய் குறித்துப் பேசிய வார்த்தைகள் அரங்கத்தை அதிர வைத்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான விருது வழங்கும் விழா ஒன்றில், அட்டகத்தி தினேஷ் நடித்த லப்பர் பந்து படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை சுவாசிகா கலந்துகொண்டார். மேடையில் விருது பெற்ற பின் பேசிய அவர்,
எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், நடிகர் விஜய்யை அப்படியே மலையாள சினிமாவுக்குக் கடத்திச் சென்று விடுவோம். அங்கு அவரை நாங்கள் இன்னும் பிரம்மாண்டமாகக் கொண்டாடுவோம் என்று தனது அன்பையும், கேரள ரசிகர்களின் உணர்வையும் வெளிப்படுத்தினார். அவர் இப்படிக் கூறிய மறுகணமே, அரங்கத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் கை தட்டி, ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.
