Connect with us
trisha

Cinema News

த்ரிஷா பண்ணியது அநியாயம்! 20 வருஷத்துல இதுதான் கத்துக்கிட்டாங்களா? வெளுத்து வாங்கும் பிரபலம்

Actress Trisha: தமிழ் சினிமாவையே கிட்டத்தட்ட 20 வருட காலமாக ஆட்டிப்படைத்து வருகிறார் நடிகை த்ரிஷா. மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகமான த்ரிஷா இப்போது வரைக்கும் ஒரு  முன்னணி ஹீரோயினாகவே ஜொலித்துக் கொண்டு வருகிறார்.

தற்போது வரைக்கும் விஜய், அஜித்துக்கு ஜோடியாகவே நடித்து வருகிறார். கோலிவுட்டில் இருக்கும் அனைத்து முன்னணி  நடிகர்களுடனும் நடித்து மிகவும் புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இடையிலேயே அவரது திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று நின்று போனதால் சினிமாவில் இடைவெளி வந்தது.

இதையும் படிங்க: ‘ரஜினி 171’ கதை என்னனு தெரியும்! ஸ்கிரிப்ட்டில் ஏகப்பட்ட குறைகள் – ஐய்யோ தலைவா! இது என்ன சோதனை?

அதன் பிறகு மீண்டும் நடிக்க வந்தார். ஆனால் முன்பு ஜொலித்ததை போல அவரால் ஜெயிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் வெளிவந்த படம்தான் விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் 96 போன்ற படங்கள். அந்த படம் த்ரிஷாவை மீண்டும் ஒரு பெரிய அந்தஸ்தில் தூக்கி நிறுத்தியது.

இதன் பிறகு குந்தவையாக கோலிவுட்டின் இளவரசியாகவே மாறிப்போனார் த்ரிஷா. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதில் இருந்து அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

இதையும் படிங்க: ஒன்னு சேர்ந்து இப்படி ஒரு முடிவ எடுத்துட்டாங்களே! சூர்யா குடும்பம் எடுத்த முடிவால் அதிர்ச்சியில் கோடம்பாக்கம்

அதன் பிறகு இப்போது விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதனை அடுத்து கமலுக்கு ஜோடியாகவும் மணிரத்தினம் படத்தில் நடிப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் த்ரிஷா ஒரு அறிக்கை ஒன்றை தன்னுடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

மௌனம் பேசியதே படம் வெளிவந்து 20 வருடங்கள் ஆனதை ஒட்டி ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த த்ரிஷா தன்னை அறிமுகப்படுத்திய அமீரை பற்றி அந்த அறிக்கையில் ஒன்றும் குறிப்பிடவில்லை. அமீருக்கும் சூர்யாவுக்கும் இடையே அவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அமீர் மௌனம் பேசியதே படத்திற்காக சூர்யாவுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ஒன்னு சேர்ந்து இப்படி ஒரு முடிவ எடுத்துட்டாங்களே! சூர்யா குடும்பம் எடுத்த முடிவால் அதிர்ச்சியில் கோடம்பாக்கம்

ஆனால் த்ரிஷா அப்படி செய்யாதது ஏன் என தெரியவில்லை என்றும் ஒரு வேளை அமீருக்கு நன்றி சொன்னால் சூர்யா கோபித்துக் கொள்வாரோ என நினைத்தாரா என தெரியவில்லை என்றும் த்ரிஷா செய்தது அநியாயம் என்றும் பிரபல பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top