அடுத்தது யாரு லோகேஷ் கனகராஜா?.. நடிகை ஸ்ருதிஹாசன் என்ன பதில் சொன்னாரு தெரியுமா?..

நடிகை ஸ்ருதிஹாசன் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் சலார் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு விமானம் மூலம் திரும்பிய நிலையில் சென்னை விமான நிலையத்தில் அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார். நடிகை ஸ்ருதிஹாசன் தனது காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் சில ஆண்டுகள் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அவரை பிரேக்கப் செய்து விட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாந்தனு ஹசாரிகாவிடம் இது தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு தன்னால் எந்த ஒரு பதிலும் அழிக்க முடியாது என பேசவே முடியாமல் நகர்ந்து சென்றுவிட்டார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்திக்க முடியாமல் நடிகை ஸ்ருதிஹாசனும் அவசரமாக புறப்பட்டு கிளம்பியது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

இதையும் படிங்க: சுந்தர் சியை சந்தோஷத்தில் ஆழ்த்திய அரண்மனை 4!.. இதுவரை இத்தனை கோடி கல்லா கட்டியிருக்கா?..

தமிழில் ஸ்ருதிஹாசன் நடித்த பல படங்கள் ஃபிளாப் ஆகி வந்த நிலையில், கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. இந்நிலையில் அடுத்ததாக அதன் இரண்டாம் பாகம் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். அதற்காக ஹைதராபாத்துக்கு சென்ற ஸ்ருதிஹாசன் தற்போது சென்னைக்கு திரும்பியுள்ளார்.

கேஜிஎஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் சலார் படத்தில் நடித்து பாகுபலி படத்திற்கு பிறகு தனக்கான ஒரு வெற்றியை பதிவு செய்திருந்தார். அடுத்து அவர் நடித்துள்ள கல்கி திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக உள்ள நிலையில், கல்கி படத்தை முடித்துவிட்டு ராஜாசாப் மற்றும் ஸ்பிரிட் உள்ளிட்ட படங்களின் நடிப்பார்கள் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது, மீண்டும் பிரசாந்த் நீல் படத்திலேயே நடிக்கலாம் என்ற முடிவுடன் சலார் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இதையும் படிங்க: ரஜினி கமலைத் தாண்டி பாலசந்தருக்கு பிடித்த நடிகர்! இவர யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க

சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி சுருதிஹாசனை சந்தித்த பத்திரிக்கையாளர்கள் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து படம் பண்ண போறீங்களா? என்கிற கேள்வி எழுப்பினர். அதற்கு எந்த ஒரு பதிலும் அளிக்காமல் ஸ்ருதிஹாசன் புறப்பட்ட சென்றுவிட்டார். சமீபத்தில் ராஜ்குமார் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து படு நெருக்கமாக நடித்த இனிமேல் ஆல்பம் பாடல் மட்டுமின்றி திரையுலகத்தினரையும் ஷாக் ஆக்கியது.

அந்த பாடலில் லோகேஷ் கனகராஜ் உடன் நெருக்கமாக நடித்ததுதான் ஸ்ருதிஹாசன் சாந்தனுவை பிரிவதற்கான காரணமா என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். லோகேஷ் நாகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: அரண்மனை 4 அலையில் சிக்கி சின்னாபின்னமான சிவகார்த்திகேயன்!.. எதுக்கு தம்பி இந்த வேண்டாத ரிஸ்க்!

 

Related Articles

Next Story