பிரதீப் சொன்னது சரிதான்.. இதெல்லாம் பக்கா ப்ளான்! பெரிய குண்டை தூக்கிப் போட்ட விசித்ரா

Actress Vichithra: தமிழ் சினிமாவில் ஐட்டம் பாடலில் ஆடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை விசித்ரா. அதன் பிறகு படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதிலும் குறிப்பாக செந்தில்,கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

முத்து படத்தில் படமுழுக்க வரும் விசித்ராவின் கேரக்டர் இன்றளவும் பேசப்படுகிறது. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கமே முகத்தை காட்டாமல் இருந்த விசித்ரா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார்.

இதையும் படிங்க: கலைஞரிடம் ஆசையாக கேட்ட பிரபு.. உதவிக்கு வந்த நடிகர் திலகம்!. நடந்தது இதுதான்!…

கடைசி வரை பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களின் அபிமானங்களை பெற்றார் விசித்ரா. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு ஒரு சில தனியார் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வரும் விசித்ரா பிரதீப்பை பற்றி சில விஷயங்களை கூறினார்.

அதாவது பிரதீப்பை வைத்து எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அவன் சொன்னது உண்மையாக இருந்தது என ஒரு விஷயத்தை பகிர்ந்தார். சின்ன பிக்பாஸ் வீட்டில் பாத்ரூம் கதவில் தாழ்ப்பாள் கிடையாதாம். நிறைய தடவை சின்ன பிக்பாஸிடம் விசித்ரா சொல்லியும் கடைசி வரை தாழ்ப்பாள் சரி பண்ண்வே இல்லையாம்.

இதையும் படிங்க: விஜயுடன் சேர்ந்து நடிப்பேன்.. ஆனா ஒரே கண்டிஷன்!.. பல வருடங்களுக்கு முன்பே பதில் சொன்ன அஜித்..

இதை பற்றி பிரதீப் ஒரு நாள் ‘இதை வேணும் என்றேதான் பண்ணியிருப்பார்கள். இதனால் உள்ளே இருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கிடையே ஏதாவது ஒரு மோதல் வெடிக்கும் என்ற காரணத்தினால்தான் இந்த தாழ்ப்பாள் விஷயத்தை பிக்பாஸ் டீம் பெரியதாக ஏற்றுக் கொள்ளவில்லை’ என்று பிரதீப் கூறினாராம்.

ஆனால் அந்த தாழ்ப்பாள் மேட்டர் கடைசியில் பிரதீப்பிற்கே ஆப்பாக வந்து விழுந்துவிட்டது என்பதுதான் உண்மை. ஆனால் இதுவும் ஒரு டாஸ்க் மாதிரியே பிக்பாஸ் டீம் வைத்திருக்கிறார்கள் என இப்போதுதான் புரிகிறது என விசித்ரா கூறினார்.

இதையும் படிங்க: அப்போ ‘கோட்’ படத்திலும் அந்த சீன் இருக்கும்! முத்தக்காட்சி பற்றி நடிகை வெளியிட்ட பதிவு

 

Related Articles

Next Story