
மாயாவி படம் மூலம் பிரபலமானவர் நடிகை விஷ்ணு பிரியா. அந்த படத்தில் மாற்று திறணாளியாக நடித்தவர் அவர். கடவுள் தந்த ஆழகிய பூமி பாடல் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
விஷ்ணுபிரியாவின் தந்தை சூரிய நாராயணன். சம்பவத்தன்று அவரது வீட்டில் சுற்றுலா பயணிகள் போல் தங்கிய 5 பேர் சூரிய நாராயணனை நாற்காலியில் கட்டிப் போட்டு முகத்தை டேப்பால் சுற்றி மூச்சு திணறல் ஏற்படவைத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த தங்க நகைகள், பணம் மற்றும் சிசிடிவி ஹார்டிஸ்க் என அனைத்தையும் திருடி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.