‘கைதி 2’வைத் தொடர்ந்து கார்த்தியின் அந்தப் படமும் இரண்டாம் பாகமா? போடு அடுத்த மரண பயத்தை காட்ட வராரே

Kaithi 2: தமிழ் சினிமாவில் பொதுவாகவே ஒரு படம் மாபெரும் வெற்றிப் பெற்றுவிட்டாலோ அல்லது படத்தின் நீளம் கருதியோ அதனுடைய இரண்டாம் பாகம் என்பது சாத்தியமாகிறது. பெரும்பாலான படங்களின் இரண்டாம் பாகங்கள் முதல் பாகத்தை விட அந்தளவுக்கு மக்களை சென்றடைவதில்லை.

ஒரு சில குறிப்பிட்ட படங்கள் மட்டுமே இதுவரை இரண்டாம் பாகத்திலும் மக்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது. காஞ்சனா, அரண்மனை போன்ற படங்களின் முதல் பாகம் எந்தளவு வெற்றி பெற்றதோ மக்களை சென்றடைந்ததோ அதே போல் இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: காக்க காக்க படத்துக்கு கௌதம் வைக்க ஆசைப்பட்ட பெயர்..! அதுவே செமையா இருக்குமே!

இந்த வரிசையில் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை கூடிய சீக்கிரம் லோகேஷ் ஆரம்பிப்பார் என தெரிகிறது. ரஜினியின் 170வது படத்தை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக கைதி 2 படத்திற்கு தான் அவரது கவனத்தை திருப்புவார்.

இதற்கிடையில் கார்த்தியின் இன்னொரு படமும் இரண்டாம் பாகத்தில் உருவாக இருக்கிறது. வினோத்தை இந்த சினிமாவில் வெளிச்சம் போட்டு காட்டிய படமாக தீரன் அதிகாரம் படம் அமைந்தது. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை வினோத் எடுக்க இருப்பதாக இப்போது சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: குஷி படத்தில் ‘கண்டபடி கட்டிப்பிடி’ இதுக்கு என்ன அர்த்தம் சார்? பதிலை சொல்லி அதிர்ச்சி கொடுத்த வைரமுத்து

ஏற்கனவே எச்.வினோத் கமலுடன் ஒரு படம் பண்ணப் போவதாகவும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு கமல் பிறந்த நாள் அன்று ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் கமல் இந்தியன் 2 படத்திற்காக இன்னும் 40 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதால் கமல் - எச்.வினோத் இணையும் படம் இப்போது தொடங்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது,

அதனால் இந்த கேப்பில் தீரன் அதிகாரம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துவிடலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் எச்.வினோத்.

இதையும் படிங்க: ஜெயிலர் பக்கா உப்மா… அதுக்கு லியோவே பரவாயில்லை தான்… பிரபல விமர்சகரின் தடாலடி..!

 

Related Articles

Next Story