Categories: latest news

சினேகா ரோலில் முதலில் செலக்ட் ஆனவர் நயன்! படத்தை பார்த்துவிட்டு என்ன சொன்னார் தெரியுமா?

Nayanthara: கோட் திரைப்படத்தில் சினேகா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா என ஒரு பேட்டியில் வெங்கட் பிரபு கூறியது சமூக வலைதளங்களில் வைரலானது. அதுமட்டுமல்லாமல் கோட் படத்தில் முதலில் யாரெல்லாம் நடிக்க இருந்தார்கள்? அதன்பிறகு ஏன் இந்த மாற்றம் என்பதை பற்றி அந்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார் வெங்கட் பிரபு.

மோகனுக்கு பதில் அரவிந்த் சாமியை நடிக்க வைக்கத்தான் பிளான் பண்ணி இருந்ததாகவும் கூறியிருந்தார் வெங்கட் பிரபு. அதுமட்டுமல்லாமல் மாதவனையும் இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்தாராம். ஆனால் சில பல மாற்றங்களுக்குப் பிறகு கடைசியில் படத்தில் பார்த்த அந்த கேரக்டர்கள் தான் செட் ஆகியது .

இதையும் படிங்க:சினேகா கேரக்டரில் முதல் தேர்வு இந்த நடிகைதான்… கடைசியில் அந்த பிரபலம் சொன்னது என்ன தெரியுமா?

இந்த நிலையில் கோட் படத்தை பார்த்த நயன்தாரா வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து கோட் படத்தை பற்றி பகிர்ந்து கொண்ட செய்தியை வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். கோட் திரைப்படம் வெளியாகி மூன்றாவது நாளில் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா பெங்களூரில் உள்ள ஒரு தியேட்டரில் பார்க்க சென்றார்.

பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவுக்கு போன் செய்த நயன்தாரா சினேகாவின் கதாபாத்திரத்திற்கு அவரை விட வேற எந்த சாய்ஸும் தேவைப்படாது. அந்த அளவுக்கு சினேகா நல்லா பண்ணி இருக்காங்க. நீங்க நல்ல விஷயத்தை தான் செய்திருக்கிறீர்கள்.

இதையும் படிங்க:புரமோஷனுக்கு வரலைனா எங்க பொழப்பு என்னாகுறது? அஜித்தால் இப்படி ஒரு முடிவா?

சினேகாவிடமும் இதை சொல்லுங்கள் என நயன்தாரா கூறினாராம். இது நயனின் பெருந்தன்மை என வெங்கட் பிரபு அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். அந்த அளவுக்கு கோட் திரைப்படத்தில் சில காட்சிகளில் மட்டுமே சினேகா தோன்றியிருந்தாலும் ஒரு யதார்த்தமான குடும்ப தலைவியாக படும் வேதனையை தன்னுடைய நடிப்பின் மூலம் அழகாக வெளிப்படுத்தி இருப்பார் சினேகா.

தன் கணவர் எந்த விதத்திலும் கெட்டுப்போக கூடாது என்பதிலும் ஒரு மனைவி எப்படியான போராட்டத்தை எதிர்கொள்வாள் என்பதையும் தன்னுடைய நடிப்பின் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார் சினேகா. இதற்கு முன் விஜயுடன் ஒரே ஒரு படத்தில் மட்டுமே சேர்ந்து நடித்த சினேகா அதன்பிறகு கோட் திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்திய சினிமாவிலேயே மிகச்சிறந்த நடிகை! ‘சூர்யா 44’ல் களமிறங்க ரெடியாகிட்டாங்க

Rohini

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

3 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

4 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

14 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

15 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

15 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

16 hours ago