யோசிக்காமல் அகத்தியனுக்கு மணிவண்ணன் செய்த உதவி… கடைசியில் காலம் கொடுத்த சர்ப்ரைஸ்..!

0
585

Manivannan: தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தன்னுடைய படங்களில் கொடி கட்டி பறந்தவர் மணிவண்ணன். அவரின் எல்லா படங்களிலுமே அவரின் நடிப்பை காண ஒரு கூட்டமே இருக்கும். நடிப்பில் மட்டுமல்ல அவர் தன்னிடம் வரும் இயக்குனரிடம் கூட அத்தனை எளிமையாக தான் பழகுவாராம்.

காதல் கோட்டை மூலம் வெற்றி பட இயக்குனராக மாறியவர் தான் அகத்தியன். அவர் ஆரம்ப நாட்களில் ரொம்பவே கஷ்ட ஜீவன் தான் நடத்தி வந்து இருக்கிறார். முதல் பட வாய்ப்புக்காக அவர் அழைந்து திரிந்த காலம் அதிகம். அப்போது அவர் மணிவண்ணனிடம் ஒரு கதை சொல்ல சென்று இருக்கிறார்.

இதையும் படிங்க: நீங்க வேணாம்..! முத்தழகு தான் வேணும்.. ஸ்ரேயா கோஷலை இகோவை கிளறிய அமீர்.. ஆனா ஜெயிச்சது அவர் தானாம்..!

அவர் கதையை சொல்லி விட்டு வர அகத்தியனின் தந்தை இறந்து விட்டார். நண்பர்கள் மூலம் இருந்த காசை திரட்டி எடுத்துக்கொண்டு ஊருக்கு போய் விட்டு வந்து விட்டார். இதை தொடர்ந்து 16வது நாள் காரியம் தந்தைக்கு செய்ய வேண்டும். அதற்கு 1500 ரூபாயாவது செலவு இருக்கும். ஆனால் அகத்தியனிடம் எந்த பைசாவும் இல்லை. யார் யாரிடமோ கேட்டு பாத்து இருக்கிறார்.

ஒருவரிடம் இருந்தும் அவருக்கு காசு கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் முடிவுடன் மணிவண்ணனை பார்க்க சென்று இருக்கிறார். அவர் அகத்தியனை வரவேற்று அமர வைத்து இருக்கிறார். அகத்தியன் தந்தைக்காக செய்ய வேண்டியதை கூற மணிவண்ணன் சரி, நான் என்ன செய்யணும் எனக் கேட்டு இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்னால் நான் உங்களிடம் ஒரு கதை சொன்னேன்ல சார். அந்த கதையின் உரிமையை உங்களுக்கே எழுதி தருகிறேன். அதை வைத்துக்கொண்டு எனக்கு 1500 ரூபாய் மட்டும் காசு தர முடியுமா எனத் தயங்கி கொண்டே கேட்கிறார். இதை கேட்ட மணிவண்ணனுக்கு அதிர்ச்சியாகி விட்டதாம். இங்க பாருங்க அகத்தியன். எனக்கு மட்டும் இல்ல. உங்க கதையை யாருக்கும் எப்போதும் எழுதி கொடுக்காதீர்கள்.

இதையும் படிங்க: யாருப்பா அந்த பையன்? கமல் படத்தில் நடித்த நடிகரை பார்த்து மிரண்ட ரஜினி

அந்த கதையால் உங்கள் வாழ்க்கையே மாறலாம். சினிமாவில் எப்போ என்ன நடக்கும் என யாருக்குமே தெரியாது எனக் கூறிவிட்டு அகத்தியன் கேட்ட காசையும் கொடுத்தாராம். இதை தொடர்ந்து அகத்தியன் தான் இயக்கிய அடுத்தடுத்த 6 படங்களிலும் மணிவண்ணனுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். ஒரு இடைவேளை நேரத்தில் இதை நினைவு கூர்ந்த மணிவண்ணன் நான் உங்களுக்கு கொடுத்த 1500க்கு நீங்க 6 பட வாய்ப்புகள் தந்து இருக்கீங்க.

இதனால் நான் 75 லட்ச ரூபாய் சம்பாரித்து இருக்கேன் என்றாராம். நான் எதை நினைத்தும் உங்களுக்கு அந்த உதவியை செய்யவில்லை. ஆனால் காலம் எப்படி யோசிக்கிது பார்த்தீங்களா என்றாராம். இதை கேட்ட அகத்தியனுக்கு கண்ணீரே வந்துவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: பருத்தி வீரன் பிரச்னையில் என்ன தான் நடந்தது? சூர்யாவே இத்தனை மோசமா? திரை விமர்சகர் உடைத்த உண்மை..!

google news