Connect with us
dhanush

Cinema News

அவர் இல்லைனா இது நடந்திருக்காது! நீண்ட நாளுக்கு பிறகு கணவரை பற்றி வாய்திறந்த ஐஸ்வர்யா

Dhanush Aishwarya: தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இப்போது தனுஷின் வளர்ச்சி ஒரு அபார வளர்ச்சியாகவே தமிழ் சினிமாவில் பார்க்கப்படுகிறது. அவருக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டு அதில் வெற்றியும் கண்டு வருகிறார் தனுஷ். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளில் ஒரு நேர்த்தி தெரிகிறது. அந்தக் கதையும் ஜெயித்து விடுகிறது.

சமூகத்திற்கு தேவையான கருத்துக்கள் அமைந்த கதைகளில் நடித்து மக்களின் அபிமானங்களையும் பெற்றிருக்கிறார் தனுஷ். ஆரம்பக்காலங்களில் காதல், ரொமாண்டிக் போன்ற கதைகளிலேயே நடித்து வந்த தனுஷ் இப்போது முற்றிலும் வேறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் வயதுக்கு மீறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க:ராதிகாவிடம் அடி இடியா விழுதே கோபி உங்களுக்கு!… திருந்துங்க திருந்துங்க…

தனுஷ் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இந்த தம்பதி திடீரென நாங்கள் பிரியப்போவதாக அறிவித்து ரசிகர்களுக்கும் திரைப்பிரபலங்களுக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அதிலிருந்தே இருவரும் தனித்தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள். இதுவரை இருவரும் ஒன்றாக ஒரே மேடையில் சந்திக்கவே இல்லை.

இந்த நிலையில் நீண்ட நாள்கள் கழித்து தனுஷை பற்றி ஐஸ்வர்யா வாய்திறந்திருக்கிறார். அதாவது ஐஸ்வர்யாவிடம் சமீபத்தில் பேட்டி எடுத்த போது அனிருத்தை பற்றி நிருபர் ஒருவர் கேட்டார். அவரை மூணு என்ற திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய நீங்கள் இப்போது அனிருத்தின் அபார வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேட்டார்.

இதையும் படிங்க: அந்த பாட்டு எனக்கு கிடக்கலயேன்னு ரொம்ப ஃபீல் பண்ணேன்!.. எஸ்.பி.பி கொடுத்த பேட்டி…

அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா அனிருத்தை அறிமுகப்படுத்தியது என்றால் நானாக இருக்கலாம். ஆனால் அனிருத்திற்கு இப்படி ஒரு திறமை இருக்கிறது என கண்டுபிடித்தவர் தனுஷ்தான். மேலும் அனிருத்தை அவருடைய பெற்றோர் வெளி நாட்டில் போய் படிக்க சொன்னார்கள். ஆனால் அப்போது கூட தனுஷ்தான் ‘இல்ல அவன் இங்கேயே இருக்கட்டும். அவனுக்குள் பல திறமைகள் இருக்கிறது’ என சொல்லி இங்கேயே இருக்க வைத்தார்.

மேலும் அனிருத்துக்கு கிட்டார் வாங்கிக் கொடுத்ததில் இருந்து மூணு படத்தில் அவரை இசையமைப்பாளராக மாற்றிய வரைக்கும் எல்லா பெருமைக்கும் சொந்தக்காரர் தனுஷ்தான் என ஐஸ்வர்யா கூறினார். அதனால் தனுஷ் இல்லை என்றால் இதெல்லாம் நடந்திருக்காது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: வெளிலதான் இவ்ளோ பிரச்சினைனா வீட்டுக்குள்ளேயுமா? தனிமையில் அஜித்.. டிப்ரஸனுக்கு இதுதான் காரணமா?

google news
Continue Reading

More in Cinema News

To Top