என் அப்பாவும் அஜித் அப்பாவும் அப்பல்லோல இருந்தப்போ.. மனிதம் உள்ள ஆளு சார் அவரு! நெகிழவைத்த பதிவு

Actor Ajith: கோலிவுட்டில் சமீபகாலமாக பரபரப்பாக பேசப்படும் நடிகராக மாறியிருக்கிறார் அஜித். சோசியல் மீடியாவிலும் அவர்தான் இப்போதைய கண்டெண்ட். அந்தளவுக்கு அஜித்தின் ரீசண்டாக புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. யார்தான் இந்த புகைப்படத்தை அப்லோடு செய்கிறார்கள் என்று தெரியாமல் சில குரூப் அஜித்தின் அஜர்பைஜான் புகைப்படத்தை அப்டேட் செய்து வரும் நிலையில்,

இன்னொரு பக்கம் நடிகர் ஆரவ் அஜித்துடன் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு அவருடைய பப்ளிசிட்டியையும் தேடிக் கொள்கிறார். இந்த நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் எம்.எஸ். பிரபு சமீபத்தில் அவருடைய சினிமா அனுபவங்களை ஒரு பேட்டி மூலம் பகிர்ந்து வருகிறார். அதில் அஜித்தை பற்றியும் சில சுவாரஸ்யமான சம்பவங்களை கூறினார்.

இதையும் படிங்க: சந்திரபாபுவின் வாய்ப்பை தட்டி பறித்த நடிகர் திலகம்… இதுக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா!..

அஜித் நடித்த வாலி மற்றும் முகவரி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் எம்.எஸ்.பிரபு. வாலி படத்தில் இருந்த போது எஸ்.ஜே.சூர்யாவை மிகவும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தினாராம் அஜித்.ஒரு ஹீரோ இப்படியெல்லாம் இருப்பார்களா என்ற பிரமிப்பை ஏற்படுத்தினார் அஜித் என பிரபு கூறினார்.

அதே போல் முகவரி படத்தின் சமயத்திலும் அக்கறையுடன் இருந்தாராம். அந்த நேரத்தில்தான் எம்.எஸ்.பிரபுவின் அப்பாவும் அஜித் அப்பாவும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்களாம். அஜித் அவருடைய அப்பாவின் செக்கப்பிற்காக வந்தாராம். எம்.எஸ்,பிரபுவின் அப்பா கடைசி நிமிடத்தை எண்ணிக் கொண்டிருந்தாராம்.

இதையும் படிங்க: அவங்க சும்மா இருந்தாங்க!… பேட்டி கொடுத்து மறுபடியும் அசிங்கப்படும் நிக்சன்… கழுவி ஊத்திட்டு இருக்காங்கப்பா

அதை அறிந்த அஜித் பிரபுவுக்கு மிகவும் சப்போர்ட்டாக இருந்தாராம். அந்த நேரத்தில் நமக்கு ஒரு தோள் வேண்டும். அது அஜித் எனக்காக இருந்தது இப்போ வரைக்கும் என்னால் மறக்க முடியாது. நடிகர்களில் சிறந்த நடிகர் யார் வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் நடிகர்களில் சிறந்த மனிதர் என்றால் அது அஜித். அந்த மனிதரிடம் இருக்கும் மனிதம் மிகவும் புனிதமானது என எம்.எஸ்.பிரபு கூறினார்.

 

Related Articles

Next Story