விடாமுயற்சிக்கு விடுமுறை! இத செய்ய தவறிட்டாரே அஜித்? பொங்கி எழும் பிரபலம்

Vidamuyarchi Movie: கோலிவுட்டில் மிக உச்ச நட்சத்திரமாக கருதப்படுபவர் நடிகர் அஜித். சமீப காலமாக அஜித் சம்பந்தப்பட்ட பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. தன் பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பது ,மனைவியுடன் நேரத்தை செலவழிப்பது, பைக் ரேஸ் சமயத்தின் போது சமையல் செய்வது போன்ற இது மாதிரியான பல விஷயங்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆனால் அவருடைய புதிய படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. ஏற்கனவே மகிழ்த்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருந்த அஜித் தற்போது அந்தப் படத்தில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துள்ளதாக தெரிகிறது. அதன் காரணமாகவே தான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போகும் குட் பேட் அக்லி படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இதையும் படிங்க: 80களில் சிறகடித்துப் பறந்த சின்னக்குயில் சித்ரா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?..

அதுவும் விடாமுயற்சி படம் ஆரம்பத்திலிருந்து ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து கொண்டு வருகிறது. கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன நிலையிலும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாமல் நீண்டு கொண்டே இருக்கின்றது. இதற்கிடையில் லைக்கா நிறுவனம் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருப்பதாகவும் அஜித்துக்கும் மகிழ் திருமேனிக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இதைப்பற்றி வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் தெளிவாக கூறியிருக்கிறார். அதாவது ஒரு படத்தின் ப்ராஜெக்ட் ஆரம்பிக்கிறது என்றால் ஹீரோவின் பங்கு என்பது மிக மிக முக்கியம். அதிலும் குறிப்பாக விஜய் அஜித் இவர்களின் படங்கள் என்றால் அதன் துவக்க புள்ளியே இந்த ஹீரோக்களாக தான் இருக்க முடியும்.

இதையும் படிங்க: பேரரசுக்கு மேடையிலேயே ஆப்பு வைத்த வெற்றிமாறன்!.. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு!..

ஏனெனில் இவர்கள்தான் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் யார் என்பதை முடிவு செய்வார்கள். விடாமுயற்சி படத்தில் இப்படி ஒரு சிக்கல் வரும்போது அஜித் இதில் தலையிட்டு என்ன மாதிரியான பிரச்சனை என்பதை பேசி தீர்த்திருக்க வேண்டும்.

ஏனெனில் அஜித் தான் இந்த படத்திற்கான தயாரிப்பாளரையும் இயக்குனரையும் தேர்ந்தெடுத்தார். அதனால் அவர்கள் இருவரையும் உட்கார வைத்து அஜித்தும் சேர்ந்து இந்தப் படத்தின் பிரச்சனை எங்கு போய் முட்டிக்கொண்டு நிற்கின்றது என்பதை ஆராய்ந்து ஒரு தீர்வை சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அஜித் அதை செய்தாரா என்றால் இல்லை. ஒரு சிறுபிள்ளைத்தனமாகவே அஜித் இப்போது மாறிவருகிறார். விடுமுறை எப்போது கிடைக்கும் என்பதைப் போலவே அவர் மனநிலை இப்போது மாறி வருகிறது என வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: 16 வருஷ போராட்டமா?.. பிருத்விராஜின் ஆடுஜீவிதம் உருவான கதையை கேட்டு ஆடிப்போன அக்‌ஷய் குமார்!..

 

Related Articles

Next Story