Ajith: சாயம் எல்லாம் வெளுத்து போச்சா.. இந்தளவுக்கு அஜித் இறங்கிட்டாரா?

தற்போது அஜித் துபாயில் நடக்கும் கார் ரேஸில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவருடைய அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைய இருக்கிறார். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

மீண்டும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் அந்த படத்தை தயாரிக்கிறார்களா என்பது தெரியவில்லை. இதற்கு இடையில் எந்த தயாரிப்பாளரும் படத்தை தயாரிக்க முன் வராததால் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் இடம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதில் பெரிய விஷயமாக பார்க்கப்படுவது அஜித்தின் சம்பளம் தான். அதனாலேயே பல தயாரிப்பு நிறுவனங்கள் அஜித்தின் படத்தை தயாரிக்க தயங்குவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் அஜித் பற்றிய இன்னொரு தகவலும் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன. தன்னை பார்ப்பதற்கு நாள்தோறும் ரேஸ் ட்ராக்கில் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். அதோடு அஜித்துடன் புகைப்படங்களும் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்காகவோ என்னவோ திடீரென ஒரு கண்டிஷனை விதித்திருக்கிறார்களாம். அஜித்துடன் போட்டோ எடுத்துக் கொள்வதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 750 ரூபாய் கட்டணம் வசூலிக்க போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

இது அஜித்திற்கு தெரியுமா தெரியாதா? என்பது சந்தேகம். இருந்தாலும் இப்படி வசூலிக்கிறார்கள் என்றால் அஜித்திற்கு தெரிந்தே தான் இது நடந்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதுவரை அஜித்தை பற்றி மக்கள் மனதில் ஒரு அபிப்பிராயம் இருந்தது. ஆனால் இந்த அளவு அஜித் இறங்கிவிட்டாரா என்று பார்க்கும் பொழுது ஒரு பக்கம் வருத்தமாகவும் இருப்பதாகவும்சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்ல சமீபகாலமாக அஜித்தை பார்ப்பதற்கு பிரபலங்களும் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருப்பதாக தெரிகிறது. ரிலையன்ஸ் குழுமத்திலிருந்து கேம்பா நிறுவனத்திற்காக அஜித்திற்கு ஸ்பான்சர் வழங்கி வருகிறார்கள். அதனால் கூட்டம் இருந்தால் தான் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும் என்பதற்காகவே அஜித் தரப்பிலிருந்து பிரபலங்களை வரவழைத்து வியாபார ரீதியாக இப்படி ஒரு ஏற்பாடு பண்ணுவதாக தெரிகிறது. அஜித்தை பார்ப்பதற்கு ஒரு கூட்டம் வந்தாலும் அங்கு வருகை தரும் பிரபலங்களை பார்ப்பதற்கும் சில கூட்டம் வரத்தான் செய்யும். இதுவும் ஒரு வகை பிசினஸ் தான் என்று கூறப்படுகின்றன.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

3 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago