Connect with us

Cinema News

சொல் பேச்சு கேட்ட சிவகார்த்திகேயன்!… தன் புரோமோஷனுக்காக அவரை பயன்படுத்தி கொண்ட அஜித்… பொறாமையின் உச்சம்

Ajith: நடிகர் அஜித்திடம் பொதுவாகவே விஜய் மீது ஒரு பொறாமை குணம் இருக்கும் என்பதை சமீபத்திய நிகழ்வில் பார்க்க முடிகிறது. ஆனால் இதை பல நாட்களாகவே அவர் சத்தம் இல்லாமல் செய்து கொண்டு இருப்பது குறித்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் விஜய் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட இருக்கும் இடம் தெரியாமல் இருந்த அஜித் குறித்து தினமும் ஒரு புகைப்படம் வருவது அவர் ரசிகர்களுக்கே கொஞ்சம் விசித்திரமான விஷயமாகி இருக்கிறது.

இதையும் படிங்க: சிவாஜி சினிமா உலகில் காலடி எடுத்து வைக்க காரணமாக இருந்தவர் இந்த நடிகரா? என்ன ஒரு ஆச்சரியம்..!

இதற்கு பின்னால் ஒரு அதிர்ச்சி சம்பவம் இருப்பதாக கூறுகின்றனர். அதாவது சிவகார்த்திகேயன் துணிவு ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தினை சந்தித்து இருக்கிறார். அப்போது இருவரும் போட்டோ எடுத்து கொண்டு இருந்தனர். ஆனால் அஜித் எப்போதும் போல இதை இப்போது வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டாராம். அது போல சிவாவும் வெளியில் விடாமல் இருந்து வந்து இருக்கிறார்.

திடீரென அஜித்திடம் இருந்து சிவகார்த்திகேயனுக்கு கால் வந்தது. நீங்க எடுத்துக்கிட்ட போட்டோவை இப்போ ரிலீஸ் செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டதாம். விசாரித்து பார்க்கும் போது அன்று தான் வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வந்தது. 

அந்த நேரத்தில் தான் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் இருக்கும் புகைப்படமும் வெளியானது. இப்படி தொடர்ந்து விஜய் வைரலாகும் போது அஜித் சேர்ந்த ஒரு தகவலும் சரியாக வைரலாகும். தற்போது பார்க்கும் போது தான் அது அஜித்தின் ஐடியா என்றும் புரோமோஷனை சத்தமே இல்லாமல் செய்து வந்து இருக்கிறார் என்பதும் தெரிய வந்து இருக்கிறது.

அப்போ இனி நிறைய அப்டேட் வரும் போல!

இதையும் படிங்க: ராஜீயை ஏமாற்றி ஓடிய கண்ணன்!… காப்பாற்றிய பாக்கியா… ஒருவழியா விஷயத்துக்கு வந்துட்டீங்க போல

google news
Continue Reading

More in Cinema News

To Top