Connect with us

latest news

ராஜீயை ஏமாற்றி ஓடிய கண்ணன்!… காப்பாற்றிய பாக்கியா… ஒருவழியா விஷயத்துக்கு வந்துட்டீங்க போல

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராஜீ ரூமில் தனியாக இருக்கிறார். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்க கண்ணன் தான் என்பதால் திறக்கிறார். எங்க போன எனக் கேட்க நண்பர்களை பார்க்க போனதாக சொல்கிறார். பின்னர் ராஜீயிடம் தப்பாக நடக்க முயல்கிறான். ஆனால் ராஜீ தனியாக போய் உட்கார்ந்து கொள்கிறார்.

எப்போ கல்யாணம் செஞ்சிக்க போறோம் என ராஜீ கேட்க  பண்ணிக்கலாம் எனத் தட்டி கழிக்கிறான் கண்ணன். திடீரென கால் வர பேச வெளியில் செல்லும் போது பேக்கை ராஜீ செக் செய்து பார்க்கிறார். உள்ளே நகை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து விடுகிறார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை பார்த்ததும் கணித்த பானுமதி.. அவர் சொன்ன ஜோசியமும் அப்படியே பலிச்சிடுச்சே!..

அந்த நேரத்தில் கண்ணனுன் உள்ளே வந்துவிட இதை எப்போ எடுத்துட்டு வந்த எனக் கேட்க நீ பாத்ரூம் போனப்ப எடுத்துட்டு வந்தேன். பணக்காரி உன்னை பார்த்துக்க காசு வேண்டும் என்கிறார். இது எங்கப்பா உழைப்பு. நான் போலீஸ் போறேன் என்கிறார் ராஜீ. இதெல்லாம் எனக்கு வேணும் என கண்ணன் சொல்ல முடியாது என்கிறார் ராஜீ.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. கோமதியை பார்க்க சென்ற பாக்கியாவுக்கு அவரின் அண்ணன் மகள் ஓடிப்போன விஷயம் தெரிகிறது. பின்னர் அவர்களிடம் பேசிவிட்டு வெளியில் வர பாக்கியா காதில் இது விழுகிறது. இருந்தும் அவர் கேட்க முடியாமல் போய் விடுகிறார். ஒரு கட்டத்தில் கண்ணன் நான் உன்னை சொத்துக்காக தான் கல்யாணம் செய்ய நினைத்தேன்.

இப்போ ரெண்டு நாள் உன்கூட சந்தோஷமா இருந்துட்டு இந்த நகையை ஆட்டைய போடலாம் என வந்ததாக உண்மையை உடைக்கிறார். ராஜீயிடம் இருந்து தப்பித்து வெளியில் செல்ல அவனை துரத்தி கொண்டு செல்கிறார். பாக்கியா இதை பார்த்துவிட்டு அவரும் பின் தொடர்கின்றனர். எழிலும் வர அவர் துரத்தி சென்றும் கண்ணன் வந்த காரில் சென்று தப்பி விடுகிறான்.

இதையும் படிங்க: தயாரிப்பளரை அசிங்கப்படுத்த படம் எடுத்த பானுமதி!.. ஆனாலும் இவ்வளவு நக்கல் ஆகாது!..

google news
Continue Reading

More in latest news

To Top