More
Categories: Cinema News latest news

விஜயின் வேடத்தை கேட்ட அஜித்.. கடுப்பாகி சூர்யாவை கொண்டு வந்த இயக்குனர்.. ஓ இதுதான் விசயமா?!..

திரையுலகில் ஒரு கதையில் எந்த நடிகர் நடிக்கப் போகிறார் என்பதை யாரும் தீர்மானிக்க முடியாது. அந்த கதை எந்த ஹீரோவுக்கு செல்கிறதோ அவரே நடிப்பார். ஒரு கதை ஒரு ஹீரோவுக்கு பிடிக்காமல் போக, அதில் வேறு ஒரு ஹீரோ நடிப்பார். ரஜினி – கமல் காலம் துவங்கி தனுஷ் – சிம்பு காலம் வரை அது பலமுறை நடந்துள்ளது.

எந்திரன் திரைப்படம் கூட கமல் நடக்க வேண்டிய படம்தான். ஆனால், ரஜினி நடித்தார். வடசென்னை திரைப்படம் கூட சிம்பு நடிக்க வேண்டிய படம்தான். ஆனால், தனுஷ் நடித்தார். அதேபோல் அஜித் நடிக்க வேண்டிய கதைகளில் விஜய், சூர்யா போன்ற ஹீரோக்கள் நடித்துள்ளனர். இது பலமுறை நடந்துள்ளது.

Advertising
Advertising

nerukku ner

அஜித்தும், சூர்யா இணைந்து நடித்த திரைப்படம்தான் ‘நேருக்கு நேர்’. இப்படத்தை இயக்குனர் வசந்த் இயக்கியிருந்தார். இப்படம் 1997ம் ஆண்டு இப்படம் வெளியானது. இப்படம் மூலம்தான் நடிகை சிம்ரன் ரசிகர்களிடம் பிரபலமானார்.

இப்படத்தில் முதலில் விஜயும், அஜித்தும் இணைந்து நடித்தனர். ஆனால், இந்த கதையில் அஜித்துக்கு பெரிய ஈடுபாடு இல்லை. ஆனால், தன்னை ஆசை படத்தில் நடிக்க வைத்த வசந்த் இயக்குனர் என்பதால் நடிக்க சம்மதித்துள்ளார். ஆனால், படத்தில் தன்னை விட விஜய்க்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக நினைத்த அஜித், எனக்கு விஜய் நடிக்கும் கதாபாத்திரத்தை கொடுங்கள் என வசந்திடம் கேட்க, அவர் முடியாது எனக்கூறியுள்ளார்.

ajith

மேலும், இப்படத்தில் நீ நடிக்க வேண்டாம் எனவும் கூறிவிட்டார். அதனால்தான் அப்படத்திலிருந்து வெளியேறினார் அஜித். அதோடு, உனக்கு ஒரு பதில் ஒரு புது முகத்தை நடிக்க வைக்கிறேன் எனக்கூறி சூர்யாவை அப்படத்தில் அறிமுகம் செய்தார் வசந்த். இப்படித்தான் சூர்யா சினிமா பிரவசேம் தொடங்கியது. அதன்பின் வசந்தின் படங்களில் அஜித் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கவர்ச்சி ராணி சில்க் கடிச்ச ஆப்பிள் எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் போனதுன்னு தெரியுமா?

Published by
சிவா

Recent Posts