Homelatest newsகார் ரேஸ் மீது வந்த காதல்!.. விதை போட்டது அங்கதான்!.. அஜித் சொன்ன பிளாஷ்பேக்!..

கார் ரேஸ் மீது வந்த காதல்!.. விதை போட்டது அங்கதான்!.. அஜித் சொன்ன பிளாஷ்பேக்!..

நடிகர் அஜித் எப்போது அமராவதி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினாரோ அப்போது முதலே அவர் அடிக்கடி பைக் மற்றும் கார் ரேஸ்களில் ஈடுபடும் செய்திகள் வெளியாகி வந்தது. அப்போதெல்லாம் இப்போது போல சமூக வலைதளங்கள் இல்லை என்பதால் அது வெளியே தெரியவில்லை..

ஒருபக்கம் சினிமாவில் நடிப்பது, ஒருபக்கம் பைக் மற்றும் கார் ரேஸில் ஈடுபடுவது என தொடர்ந்து வந்தார் அஜித். அதனால் பலமுறை விபத்தில் சிக்கி அவரின் முதுகு கால் பகுதிகளில் அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது. பல வருடங்களுக்குப் பின் கடந்த சில வருடங்களாக அஜித் தொடர்ந்து கார் ரேஸ் போட்டிகளில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் தினமும் வெளியாகி வருகிறது..

கார் ரேஸில் தனக்கு எப்படி ஆர்வம் வந்தது என்பது பற்றி ஊடகம் ஒன்றில் பேசியிருக்கிறார் அஜித். ‘எனது ஆர்வம் 1970 களில் துவங்கியது.. அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும்.. என் தந்தையின் நண்பர்களில் சிலர் இந்திய சாம்பியன்ஷிப் ரேசில் கலந்து கொள்வார்கள்.. அப்படித்தான் மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் எனக்கு அறிமுகமானது..

ajithrace
ajithrace

அதிலிருந்துதான் எனக்கு ரேஸ் மீது ஆர்வம் வந்தது. கூடவே விஜய் மல்லையா அணியில் ரேஸ் ஓட்டும் வருவது நிறுவனத்தில்தான் என் தந்தை பணியாற்றினார். விஜய் மல்லையாதான் முதல் இந்திய ஃபார்முலா 1 அணியை உருவாக்கியவர். எனவே அவரது புரோட்டோடைப் ரேஸ் கார்கள் எல்லாம் எங்கள் வீட்டு பக்கத்தில்தான் இருக்கும்.. அதை பார்த்துதான் நான் வளர்ந்தேன்.. இதற்கான விதை அப்போது விதைக்கப்பட்டிருக்கலாம்..

உண்மையாக சொல்லப் போனால் ரேசிங் நான் எனக்காக செய்யவில்லை.. எனக்கு இந்த விளையாட்டு மீது அளவு கடந்த காதல் உண்டு. என்னால் முடிந்தவரை நீண்ட காலத்திற்கு ஒரு பந்தய ஓட்டுனராக இருக்க நான் நிச்சயமாக விரும்புகிறேன்’ என சொல்லியிருக்கிறார்..

RELATED ARTICLES

Most Popular

Recent Comments