விஜய்க்கு சித்தார்த் குரல் கொடுத்தாரா?.. ஏன் லியோவுக்கு 4 மணி காட்சி கொடுக்கல.. அமீர் ஆதங்கம்!..

நடிகர் சித்தார்த் கர்நாடகாவில் தனக்கு நேர்ந்த கொடுமைக்கு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ் சினிமா நடிகர்கள் யாருமே குரல் கொடுக்கவில்லை என வருத்தப்பட்டு பேசியிருந்த நிலையில், இயக்குனர் அமீர் மற்றும் விஜய்சேதுபதி கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் சித்தார்த் குறித்த கேள்வியை முன் வைத்தனர்.

அதற்கு பதிலளித்த இயக்குனர் அமீர் நடிகர் விஜய் படங்கள் வெளியாகும் போதெல்லாம் பிரச்சனை வருகிறதே அதற்கு சித்தார்த் குரல் கொடுத்தாரா? என பதில் கேள்வி கேட்டு வாயடைத்துள்ளார். மேலும், இலங்கை விவகாரம் தொடர்பாக என்னை கைது செய்தார்களே அப்போது சித்தார்த் குரல் கொடுத்தாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: காத்திருந்து காத்திருந்து!.. 2 நாட்களாக புக் மை ஷோவில் குடியிருக்கும் சென்னை வாசிகள்.. லியோ பரிதாபங்கள்!

சித்தார்த்துக்கு நடந்தது அனைவருக்கும் வேதனையளிக்கும் விதம் தான். ஆனால், சினிமா பிரபலங்கள் அவர்களுக்கு ஏற்ற சூழல்களில் தான் பேசுகின்றனர். யாரும் யாருக்குமே எல்லா நேரங்களிலும் குரல் கொடுப்பதில்லை. ஆனால், அதற்காக சித்தார்த் தனித்து விடப்பட்டு விட்டார் என்பதெல்லாம் இல்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும், நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்துக்கு ஏன் 4 மணிக்கு சிறப்பு காட்சி அனுமதிக்கவில்லை என்றும் அதுகுறித்து உங்கள் கருத்து என்ன? என்கிற கேள்விக்கு சிறப்பு காட்சிக்கு உரிய பாதுகாப்புடன் அனுமதி கொடுக்க வேண்டும்.

இதையும் படிங்க: அய்யோ போச்சே!.. மோடி ஸ்டேடியத்தில் லெஜண்ட் லேடியிடமே வேலையை காட்டிடாங்களா!.. கதறும் ஊர்வசி!..

ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிறதென்றால் தீபாவளி போல கொண்டாடுகிறார்கள். அதில், கொண்டாட்டம் இருக்கலாமே தவிர, உயிர் பலி இருக்கக் கூடாது. அன்னைக்கு கோயம்பேட்டில் ஒரு ரசிகர் இறக்கும் போது நானும் அங்கே தான் இருந்தேன். அதை பார்த்து அப்படியே பதை பதைத்துப் போனேன்.

ரசிகர்கள் கொண்டாட்டத்தை கட்டுப்பாடுடன் வைத்துக் கொண்டால் கட்டாயம் அனுமதி கிடைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.

 

Related Articles

Next Story