பிறந்த நாளுக்கு கார்த்திக்கு கிடைச்ச பரிசு! சூர்யாவுக்கு வந்த ஆபத்து வராமல் இருந்தா சரி

Actor Karthi: தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதில் ஒரு சில  நடிகர்கள் புகழின் உச்சிக்கு சென்றிருந்தாலும் பல நடிகர்கள் இன்னும் அந்த அளவு இடத்தை அடைய முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் சிவகுமாரின் மகன்கள் ஆன சூர்யாவும் கார்த்தியும் அடுத்தடுத்த பல படங்களை கொடுத்ததன் மூலம் ஒரு தவிர்க்க முடியாத நடிகர்களாக இன்று கோலிவுட்டில் மாறி இருக்கிறார்கள். ஒரு பக்கம் சூர்யா பல நல்ல கதை களத்தோடு சூப்பர் ஹிட் […]

By :  Rohini
Update: 2024-05-27 05:20 GMT

surya

Actor Karthi: தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதில் ஒரு சில நடிகர்கள் புகழின் உச்சிக்கு சென்றிருந்தாலும் பல நடிகர்கள் இன்னும் அந்த அளவு இடத்தை அடைய முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் சிவகுமாரின் மகன்கள் ஆன சூர்யாவும் கார்த்தியும் அடுத்தடுத்த பல படங்களை கொடுத்ததன் மூலம் ஒரு தவிர்க்க முடியாத நடிகர்களாக இன்று கோலிவுட்டில் மாறி இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் சூர்யா பல நல்ல கதை களத்தோடு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் நிலையில் கார்த்தி புதுப்புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அதன் மூலம் பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி அவரது பிறந்த நாள் என்பதால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் புதிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் கார்த்திக் .

இதையும் படிங்க: முதல்ல ரெண்டுனீங்க.. இப்போ மூணா? ‘கோட்’ படம் பற்றி புதிய அப்டேட்! படமுழுக்க விஜய்தானா?

பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்தின் போஸ்டரும் நலன் குமாரசுவாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்ற படத்தின் போஸ்டரும் வெளியானது. 2 இயக்கனர்களுமே ஒரு திறமையான இயக்குனர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. விஜய் சேதுபதியை வைத்து சூது கவ்வும் மற்றும் 96 போன்ற படங்களை எடுத்த இயக்குனர்கள் தான் இவர்கள்.

அதனால் இந்த இரண்டு படங்களும் கார்த்திக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை தேடி தரும் படங்களாக அமையும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கார்த்திக்கின் பிறந்தநாள் அன்று அவருடைய ரசிகர்கள் அவருக்கு புதியதாக ஒரு பட்டத்தை கொடுத்திருக்கின்றனர். புரட்சி நடிகர் கார்த்தி என அவருடைய ரசிகர்கள் அவருக்கு பட்டத்தை கொடுத்திருக்கின்றனர்.

இதைப்பற்றி சமூக வலைதளங்களில் பல விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு முன் சூர்யாவுக்கு புரட்சி புயல் என்ற ஒரு பட்டத்தை கொடுக்க வைகோ தொண்டர்கள் சூர்யா வீட்டு முன் நின்று போராட்டங்களை நடத்தினார்களாம்.

ஏனெனில் வைகோவின் பெயர் புரட்சி புயலாக இருந்ததாம். அதை சூர்யாவுக்கு பயன்படுத்தியதால் அவருடைய தொண்டர்கள் அவர் வீட்டின் முன் நின்று ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருக்கின்றனர். அதனால் கார்த்தியும் கொஞ்சம் யோசித்து இந்த பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் சில கமெண்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் ரசிகராக கேப்டன் செய்த தரமான சம்பவம்!.. அவர் அப்பவே அப்படித்தான் போல!..

Tags:    

Similar News