குறையாத வசூல்!. பாக்ஸ் ஆபிசில் கெத்து காட்டும் படை தலைவன்!.. குட்டி கேப்டன் ஹிட் கொடுப்பாரா!..

By :  MURUGAN
Published On 2025-06-16 08:14 IST   |   Updated On 2025-06-16 08:14:00 IST

Padai thalaivan collection: தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருந்தவர் விஜயகாந்த். அவரின் மகன் சண்முக பாண்டியன் 2015ம் வருடமே சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் மதுர வீரன் படத்தில் நடித்தார். அப்பா விஜயகாந்தோடு இணைந்து தமி்ழனென்று சொல் என்கிற படம் அறிவிக்கப்பட்டது. ஆனால், விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அது நடக்கவில்லை.

அதன்பின் அப்பாவை பார்த்துகொண்டதால் சண்முக பாண்டியன் சினிமாவில் நடிக்கவில்லை. இப்போது படை தலைவன் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த படம் தனக்கு சினிமாவில் நல்ல இடத்தை கொடுக்கும் என அவர் நம்புகிறார். என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால் போதும் என கண்ணீர் மல்க பேட்டியும் கொடுத்தார்.

அன்பு என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். விஜயகாந்த் மகன் என்பதே சண்முக பாண்டியனுக்கு அடையாளமாக இருப்பதால் படம் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். முதல் நாள் இப்படம் 1.29 கோடியும், இரண்டாம் நாள் 1.22 கோடியும், 3ம் நாளான நேற்று இப்படம் 1.39 கோடியும் படம் வெளியாகி 3 நாட்களில் மொத்தம் 3.9 கோடியும் வசூல் செய்திருப்பதாக சினிமா வசூல் நிலவரங்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் Saccnlik இணையதளம் தெரிவித்திருக்கிறது. ஆனால், சில இணையதளங்கள் இப்படம் 5 கோடி வரை வசூல் செய்திருப்பதாக பதிவிட்டிருக்கிறார்கள்.



 

பொதுவாக முதள் நாள் வசூல் வரும். அதன்பின் சனி, ஞாயிறுகளில் வசூல் அதிகரிக்கும். ஒரே மாதிரி வசூல் இருக்காது. படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வந்தால் வசூல் படுத்துவிடும். ஆனால், படை தலைவனை பொறுத்தவரை 3 நாட்களும் ஒரு கோடிக்கும் குறையாமல் வசூல் செய்து வருகிறது. இதுவே நல்ல வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் ஏஐ மூலம் விஜயகாந்தையும் கொண்டு வந்து அவரின் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்திருக்கிறார்கள். தொலைந்து போன தனது யானை சண்முக பாண்டியன் கண்டு பிடிப்பது போல கதை அமைத்திருக்கிறார்கள். அதோடு, அப்பாவை போலவே ஆக்சன் காட்சிகளில் அசத்தலாக நடித்திருக்கிறார் சண்முக பாண்டியன். இன்னும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் சினிமாவில் நல்ல இடத்தை பிடிப்பார் என்றே கணிக்கப்படுகிறது.

Tags:    

Similar News