ஸ்ரீகாந்த் மட்டுமில்லை... பல பிரபலமான நடிகர்களும் இருக்காங்க!.. பீதி கிளப்பும் பிரபலம்!...
Srikanth: நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதை மருந்து விஷயத்தில் தொடர்பு இருப்பதாக போலீசார் கைது செய்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்த் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். கிருஷ்ணா போதை மருந்து பயன்படுத்தவில்லை என மருத்துவ பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டாலும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், வழக்கறிஞருமான கீதா என்பவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல பகீர் தகவல்களை பகிர்ந்திருக்கிறார். மது, போதை போன்ற கலாச்சாரம் தமிழகத்தில் பல வருடங்களாகவே இருக்கிறது. அதிமுக, திமுக அரசு மாறி மாறி வந்தாலும் யாரும் இதை தடுத்து நிறுத்துவதில்லை. போலீஸ் அதிகாரிகளே ஊழல் செய்கிறார்கள். அவர்களிடம் எப்படி நியாயத்தை எதிர்பார்க்கமுடியும்?.
விஜய், திரிஷா எல்லோருக்கும் இந்த பழக்கம் இருக்கிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கே போதை மருந்து பழக்கம் உண்டு. நடிகர் தனுஷ் ஹிந்தி படங்களில் நடித்தபோது மும்பை மாஃபியாவுடன் பழக்கம் ஏற்பட்டு அவனுக்கும் போதை மருந்து பழக்கம் ஏற்பட்டது. விஷால் உள்ளிட்ட பலரும் இதில் இருக்கிறார்கள். நடிகர் கமல் கொடுக்கும் பார்ட்டிகளில் கொக்கைன் கொடுக்கப்படுவதாக சுசித்ரா சொல்லியிருக்கிறார்.
இவரெல்லாம் எம்.பியாகி நாட்டுக்கு என்ன செய்யப்போகிறார்?. இவர்கள் எல்லாமே மோசமானவர்கள்தான். வெளியே நல்லவர்கள் போல நடிக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள எல்லா கல்லூரி மற்றும் பள்ளிகளின் அருகில் பெட்டிக்கடை ஒன்றை திறந்து சாக்லேட் போன்ற போதைப்பொருளை விற்பனை செய்கிறார்கள்.
அரசு நினைத்தால் இதையெல்லாம் கட்டுப்படுத்த முடியாதா என்ன?. அவர்களுக்கு தெரிந்துதான் இது நடக்கிறது. அதானிக்கு சொந்தமான கண்டெய்னரில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பல டான் கொக்கைன் சிக்கியது. அது என்னவானது?. இதெல்லாம் மோடிக்கு தெரியாதா என்ன?. இவர்கள் எல்லாமே ஊழல்வாதிகள்தான்’ என பொங்கியிருக்கிறார்.
இவர் பேசியுள்ள வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யுங்கள்.
https://www.youtube.com/watch?v=FQLGUucOYjQ