யாருக்கும் தெரியாத மீனாவின் அந்தப் பக்கம்? நடந்ததை உரித்துக் காட்டும் பயில்வான்

தாயைப் போல் பிள்ளை நூலைப் போல் சேலைன்னு சும்மாவா சொன்னாங்க...

By :  sankaran
Update: 2024-09-20 15:00 GMT

நடிகை மீனாவின் இன்னொரு பக்கம் இப்படியா இருக்கும் என்று நம்மையே வியக்க வைத்துள்ளார் பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன். என்னென்ன சொல்கிறாருன்னு பாருங்க.


மீனாவின் அம்மாவும் நடிகை தான். மீனாவின் சித்தியும் நடிகை தான். மீனாவின் சித்தி முன்னாள் அமைச்சருக்கு மனைவியாகி மாம்பலத்தில் செட்டில் ஆகிட்டாங்க. ராஜ்மல்லிகா, ராஜ்கோகிலா இருவரும் தெலுங்கு நடிகைகள். யாருமே காட்டத்துணியாத மார்பகங்களைத் துணிச்சலாகக் காட்டியவர்கள்.

அதற்கு வசமா டைரக்டர் கர்ணன் சொந்தப் படம் தயாரித்தார். அவருடைய படங்களில் பெரும்பாலும் ஜெய்சங்கர் தான் கதாநாயகனா இருப்பாரு. ராஜ்மல்லிகா, ராஜ்கோகிலா இருவருடனும் ஜெய்சங்கர் நடிச்சிருக்காரு.

ஒரு நடிகை தன்னோட மகளை நடிகையாக்குவது இயல்பு. அந்த வகையில ராஜ்மல்லிகா 14 வயசுலயே மீனாவைக் கதாநாயகியா ஆக்கிட்டாரு. ரஜினி, கமல், கார்த்திக் என எல்லா நடிகர்களோடும் நடிச்ச நடிகைகளின் பட்டியலில் மீனாவின் பெயரும் இடம்பெற்றது. குழந்தைப் போல பேச்சு, துடுக்குத் தனமான நடிப்பு, குடும்பப்பாங்கான முகம் இதெல்லாம் மீனாவுக்கு பிளஸ் பாயிண்ட்.

தொடர்ந்து வெற்றிப்படம் இருந்தா மார்க்கெட் இருக்கும். தெலுங்குல என்டிஆர், சிரஞ்சீவி என எல்லாருடனும் நடிச்சாங்க. தமிழை விட தெலுங்குல தான் அதிக சம்பளம். மார்க்கெட் குறையற நேரத்துல கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டாங்க. சரத்குமார் மீனாவைத் திருமணம் செய்ய விரும்பினார். ஆனா மீனாவோட அம்மா ஒத்துக்கல.

எல்.முருகன் மத்திய அமைச்சர். நல்ல வசதியானவர். அவர் பொங்கல் விழாவைக் கொண்டாடுறாரு. அந்த விழாவுக்கு மோடியை அழைக்கிறார். அந்த சமயத்தில் தன்னோடு ஒரு நடிகை இருந்தா நல்லாருக்கும்னு நினைச்சாரு. அதனால மீனா டெல்லிக்குப் போனாங்க. மீனாவைப் பொருத்தவரை எல்.முருகனின் வீட்டில் எல்லாரும் அவரது ரசிகர்கள். அந்த அடிப்படையில் தான் அவர் அழைத்துச் சென்றார். அந்த சமயத்தில் பிரதமர் மோடியுடன் மீனா பேசவும் இல்லை. போட்டோவும் எடுக்கல.

முருகன் வீட்டுக்குப் போனா சும்மா இல்ல. நல்ல கட்டுக் கட்டா பணம் கிடைச்சிருக்கும். அந்த வருமானத்தின் நோக்கத்தினால் தான் மீனா டெல்லிக்குப் போனாங்க.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News