அந்த ஒருவருக்காக சம்பளமே வேண்டாம் என சொன்ன இளையராஜா! இவர் மட்டுமா?

இசைஞானி இளையராஜா சம்பளமே வாங்காமல் இசையமைத்த படம் பற்றி தெரிந்துகொள்வோம்.

By :  Admin
Update: 2024-09-19 17:42 GMT

ilayaraja

Ilayaraja: தமிழ் திரையுலகில் இசை ஜாம்பவனாக திகழ்பவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக தன் இசையால் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே நடத்திக் கொண்டு வருகிறார். எல்லாவித உணர்வுகளுக்கும் இளையராஜாவின் இசை மருந்தாக இருந்திருக்கின்றன. காதல் பாடலில் தொடங்கி காதல் தோல்வி வரைக்கும் இவரது பாடலை கேட்டால் போது இருக்கிற பிரச்சினைகள் எல்லாம் ஓடி விடும்.

அதை போல் ஒரு லாங் டிராவல் போகும் போது இவரது இசையை கேட்டுக் கொண்டே போனால் போதும் அதில் இருக்கும் நிம்மதி வேறெங்கும் கிடைப்பதில்லை. அப்படி 80களில் இருந்து 2கே கிட்ஸ் வரைக்கும் அனைவரின் விருப்பமான இசையமைப்பாளராக மாறியிருக்கிறார் இளையராஜா.

இசையில் இவரை அடிச்சுக்க யாருமில்லை என்று சொல்லலாம். அந்தக் கர்வம் எப்போதுமே இளையராஜாவுக்கு இருக்கும். சாதனையாளர்களுக்கு இருக்க வேண்டியதுதான் இந்த கர்வம். ஆனால் அது அகங்காரமாக மாறிவிடக் கூடாது அல்லவா. சில சமயங்களில் அப்படியும் நடந்து கொள்வார் இளையராஜா.

அவரை பற்றி பல சர்ச்சைகள் செய்திகளில் வெளியாகிக் கொண்டே இருந்தன. யாருக்கும் உதவ மாட்டார். யாரையும் மதிக்க மாட்டார். ஒரு தூசு போலத்தான் பார்ப்பார். காசு விசயத்தில் கறாராக இருப்பார் என்றெல்லாம் கூறி வந்தனர். ஆனால் ஒரு சில சமயங்களில் ஒரு சில பேருக்காக இதை எல்லாவற்றையும் விட்டுக் கொடுப்பவர் இளையராஜா என்பது யாருக்கு தெரியும்?.

நடிகரும் இயக்குனருமான சசிகுமார் ஒரு பேட்டியில் இளையராஜாவை பற்றி ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார். பாலுமகேந்திரா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தலைமுறைகள். அந்த நேரத்தில் பாலுமகேந்திராவுக்கு கிட்டத்தட்ட 75 வயது இருக்கும் என சசிகுமார் கூறினார்.

அந்தப் படத்திற்காகத்தான் இளையராஜா சம்பளமே வேண்டாம் என சொல்லிவிட்டாராம். அது பாலுமகேந்திரா என்ற அந்த ஒற்றை ஆளுமைக்காகத்தான். அதை போல் படத்தின் ஒரு சில காட்சிகள் எஸ்.ஏ.சந்திரசேகரின் திருமண மண்டபமான சோபா மண்டபத்தில் எடுத்திருக்கிறார்கள். பாலுமகேந்திராவுக்காக எஸ்.ஏ.சந்திரசேகரும் வாடகை எதுவும் வேண்டாம். ஃபிரீயாகவே கொடுத்தார் என சசிக்குமார் கூறினார்.


Tags:    

Similar News