பிதாமகனுக்கு பிறகு மீண்டும் இணையும் விக்ரம் - சூர்யா! இனிமே கோலிவுட் கிங் இவங்கதானா?

மீண்டும் இணைந்து நடிக்கும் விக்ரம் சூர்யா... யாருடைய படத்தில் தெரியுமா?

By :  rohini
Update: 2024-09-25 11:43 GMT

vkramsurya

தமிழ் சினிமாவில் விஜய் அஜித் அவர்களுக்கு அடுத்தபடியாக அவர்களுக்கு இணையான புகழை பெற்ற ஒரு ஜோடி நடிகர்களாக கருதப்படுபவர்கள் சூர்யா மற்றும் விக்ரம் .இருவருமே தனக்கான ஒரு தனி வழியை அமைத்துக் கொண்டு சினிமாவில் தன்னுடைய அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறார்கள்.

இருவரும் சேர்ந்து பிதாமகன் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போது வரை சூர்யாவும் விக்ரமும் ஒரு வளரும் நடிகர்கள் பட்டியலில் தான் இருந்தார்கள். ஆனால் பிதாமகன் படத்திற்கு பிறகு தான் இருவருடைய மார்க்கெட் உயரத்தை நோக்கி சென்றது. அதன் பிறகு இருவருமே தனித்தனியாக நடிக்க ஆரம்பித்து இன்று கோலிவுட்டில் ஒரு புகழ்பெற்ற நடிகர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.

பொன்னியின் செல்வனில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரமிப்பை உருவாக்கினார் விக்ரம். அதைப்போல சூர்யாவின் கங்குவா திரைப்படமும் பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது .சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாக கங்குவா திரைப்படம் அமைந்திருக்கிறது.

அடுத்தடுத்து கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கும் சூர்யாவும் விக்ரமும் மீண்டும் சேர்ந்து நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதுவும் ஷங்கரின் நீண்ட கால்  கனவான வேள்பாரி நாவலில் இவர்கள் இருவரும் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே வேள் பாரி படத்தில் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என ஒரு தரப்பினர் கூறி வந்தார்கள். அதன் பிறகு பாலிவுட் நடிகர்களை நடிக்க வைக்கும் முயற்சியில் சங்கர் இருப்பதாகவும் கூறினார்கள். ஆனால் அந்த படத்தில் முழுக்க முழுக்க தமிழ் நடிகர்களையே நடிக்க வைக்கலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் அதில் சூர்யாவும் விக்ரமும் முதலிடத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம் கூடிய சீக்கிரம் ஆரம்பமாகும் என்று தெரிகிறது .இன்னொரு பக்கம் விஜய் அரசியலை நோக்கி செல்ல இருக்கிறார். அஜித் மீண்டும் தனது கார் ரேஸ் தொடர்ந்து இருக்கிறார். ஒருவேளை அஜித்தும் கார்பந்தயம் பைக் பந்தயம் என சினிமாவே வேண்டாம் என போய்விட்டாலும் அடுத்தது விக்ரமும் சூர்யாவும் தான் அவர்கள் இடத்தை பிடிப்பார்கள் என தெரிகிறது. அதற்கு ஏற்ற வகையில் இருவரின் அடுத்தடுத்த படங்களின் கதை தேர்வு மிக அற்புதமாக இருக்கிறது.

Tags:    

Similar News