கோலிவுட்டே எதிர்பார்க்கும் அஜித் - தனுஷ் கூட்டணி! எங்கே எப்போது தெரியுமா?
dhanush
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க ஜிவி படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். ஏற்கனவே அஜித் திரிஷா காம்பினேஷனில் வெளியான அனைத்துப் படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். அந்த வரிசையில் குட் பேட் அக்லி படமும் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்க போகிறார் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் இருந்து வந்தது. குட் பேட் அக்லி வெற்றியால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்தான் இயக்க இருக்கிறார் என்ற ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. தற்போது அஜித் கார் ரேஸில் தீவிரம் காட்டி வருவதால் அக்டோபர் மாதத்திற்கு பிறகுதான் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும்.
அதுவரை படத்தின் ப்ரீ புரடக்ஷன் வேலைகள் நடந்து வருவதாக தெரிகிறது. அஜித் அவருடைய ரேஸை முடித்த பிறகு படப்பிடிப்பு துவங்கும். இந்த நிலையில் அஜித்தை இயக்க போகும் தனுஷ் என ஒரு பரபரப்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் அது வெறும் வதந்தியே என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டாலும் இப்போது அது உறுதியாகியுள்ளது.
தனுஷ் அஜித்திடம் ஒன் லைன் கதையை மட்டும் சொல்லியிருக்கிறாராம். அது அஜித்துக்கு மிகவும் பிடித்துவிட்டதாம் . மீதிக் கதையை அஜித் கேட்கும் நேரத்தில் இருக்கும் போது தனுஷ் இட்லி கடை படத்திற்காக தாய்லாந்து சென்று விட்டார். அதன் பிறகு இருவருமே ஒரு சந்திப்பை நிகழ்த்தவே இல்லை. இப்போது அந்த சந்திப்பு நடக்க போவதாக சொல்லப்படுகிறது.
தனுஷ் அடுத்து போர்த்தொழில் இயக்குனருடன் ஒரு படத்தில் நடிக்க போகிறார். அது ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்க இருக்கிறது. இந்த இரண்டு வார இடைவெளியில் இட்லி கடை படத்தின் ஆர் ஆர் பணிகளை தனுஷ் முடித்துவிடலாம் என்று நினைத்திருக்கிறார். ஆனால் அஜித் தரப்பில் இருந்து இந்த நாளில் அஜித் ஃபிரீயாக இருப்பார். அதனால் வந்து கதை சொல்லுங்கள் என தனுஷுக்கு அழைப்பு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் அடுத்த வாரத்தில் தனுஷ் துபாய் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.