ஜெய்பீமை ரஜினி பாராட்டல... ஆனா நடந்ததே வேற!.. வேட்டையன் பட வாய்ப்பு பற்றி பேசிய ஞானவேல்

வேட்டையன் பட இசை வெளியீட்டு விழாவில் அப்பட இயக்குனர் ஞானவேல் பேசியது:

By :  Admin
Update: 2024-09-21 02:30 GMT

Vettaiyan: அடிப்படையில் பத்திரிக்கையாளராக இருந்தவர் ஞானவேல். ஜெய்பீம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர். இந்த படத்தை பாராட்டாதவர்களே இல்லை. அவ்வளவு தெளிவான, அழுத்தமான திரைக்கதையை ஞானவேல் அமைத்திருந்தார்.

அந்த படத்திற்கு பின் லைக்கா தயாரிப்பில் ரஜினியை வைத்து வேட்டையன் படத்தை இயக்கினார் ஞானவேல். இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. தற்போது படம் உருவாகி வருகிற அக்டோபர் 10ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் ரஜினி, ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ஞானவேல் ‘நல்ல படம் வந்தா ரஜினி சார் பாராட்டுவார். ஜெய்பீம் படம் வெளியான பின்னால் அப்படி என்னையும் கூப்பிட்டு பாராட்டுவார்னு நினைச்சேன். புது சட்டையெல்லாம் வாங்கி வச்சிருந்தேன். ஆனா. அவர் என்னை கூப்பிடல. கொஞ்ச நாளைக்கு பின்னாடி சௌந்தர்யா எனக்கு மெசேஜ் பண்ணாங்க..

அப்பாவுக்கு நீங்க கதை சொல்லுங்கன்னு சொன்னாங்க. ‘சாருக்கு இது தெரியுமா?’ என கேட்டேன். உங்களோட ஜெய்பீம் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்னாங்க. இரண்டு கதைகளை எடுத்துக்கொண்டு அவரை பார்க்க போனேன். அதுல வேட்டையன் கதையை சௌந்தர்யா தேர்ந்தெடுத்தார்.

அதன்பின் ஒரு செல்போன் அழைப்பு. அந்த மந்திரக்குரல் கேட்டது. நான் சொன்ன கதையை டெவலப் பண்ண சொன்னார் ரஜினி சார். படையாப்பா படத்தில் வரும் ஊஞ்சல் காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும். தன்னை நம்பி படம் போடும் தயாரிப்பாளருக்கு லாபம் வர வேண்டும் என நினைப்பார் ரஜினி. மேலும், ரசிகர்களையும் ஏமாத்தக்கூடாது என நினைப்பார்.

ஒரு பேட்டியில் ‘வேட்டையன் கருத்துள்ள பிரம்மாண்டமான பொழுதுபோக்கு திரைப்படம்’ என ரஜினி சார் சொன்னார். இது நமக்குதான் சொல்றார்னு புரிஞ்சி இந்த படத்தில் வேலை பாத்திருக்கேன். வேட்டையன் படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்’ என பேசினார்.

Tags:    

Similar News