யோகிபாபுவுக்கு கவுண்டமணி சொன்ன அட்வைஸ்!.. இப்பவரைக்கும் ஃபாலோ பண்றாராம்.!

By :  MURUGAN
Published On 2025-06-11 12:18 IST   |   Updated On 2025-06-11 12:18:00 IST

Goundamani: கவுண்டமணியை பின்பற்றி சினிமாவுக்கு வந்த பல காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள். சந்தானம் கூட கவுண்டமணியின் ஸ்டைலை பின்பற்றியே முன்னணி காமெடி நடிகராக மாறினார். எது சொன்னாலும் அதற்கு ஒரு கவுண்ட்டர் கொடுப்பதுதான் கவுண்டமணியின் ஸ்டைல். துவக்கத்தில் நாடக நடிகராக இருந்து பின்னாளில் சினிமாவில் நுழைந்தவர்.

80களில் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் தோல்வி அடையவே மீண்டும் காமெடி நடிகராக மாறினார். தன்னுடன் செந்திலையும் சேர்த்துகொண்டு திரையில் அவர் அடித்த லூட்டி கொஞ்ச நஞ்சமல்ல. கவுண்டமணி - செந்தில் காமெடிக்காக பல படங்கள் ஓடி இருக்கிறது.

ஒருகட்டத்தில் இரண்டாவது ஹீரோ போலவே மாறினார். இவரை பின்பற்றி வந்தவர்களில் யோகிபாபுவும் ஒருவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் கூட்டத்தில் ஒருவராக நின்றவர்தான் பாபு. அமீர் நடித்த யோகி படம் மூலம் யோகி பாபுவாக மாறினார். அதன்பின் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானர்.


ஒருகட்டத்தில் விஜய், அஜித், ரஜினி போன்ற நடிகர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். தர்பார், ஜெயிலர் போன்ற படங்களில் ரஜினியுடன் நடித்த யோகி பாபு இப்போது ஜெயிலர் 2-விலும் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய பாபு கவுண்டமணி பற்றி பேசினார்.

கவுண்டமணி சாரை வைத்துதான் எங்களின் பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் பேசிய வசனங்களைத்தான் சில காட்சிளில் பேசுகிறேன். இதை அவரிடமே சொன்னேன். ‘அதுக்கென்னப்பா எடுத்து போட்டு பேசுப்பா.. நான் என்ன காப்பிரைட்ஸா கேட்கபோறேன்’ என பெருந்தன்மையுடன் சொன்னார். ‘ஓடிக்கொண்டே இரு பாபு. எவனாவது கூப்பிடுவான். திரும்பி பார்க்காத. திரும்பி பார்த்தா உன்னை திண்ணையில உட்கார வச்சிடுவான். அப்புறம் எந்த பக்கம் போறதுன்னே தெரியாது’ என எனக்கு அறிவுரை சொன்னார். இப்போது வரை அதை பின்பற்றி வருகிறேன்’ என சொல்லியிருக்கிறார்.

கவுண்டமணியும், யோகிபாபுவும் ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் ஒன்றாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News