மீண்டும் ஒரு ஸ்டோரியை போட்டு வைரலாகும் மணிமேகலை! சும்மாவே இருக்கமாட்டாங்க போல

டிரெண்டிங்கில் இருக்க இப்படி ஒரு டெக்னிக்கா? மணிமேகலை செய்வது சரிதானா?

By :  rohini
Update: 2024-09-20 06:37 GMT

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனிமேல் நான் இருக்கமாட்டேன் என்று மணி மேகலை போட்ட ஒரு பதிவு சோசியல் மீடியாவில் பெரும் பூதாகரமாக மாறியது. அதோடு நிறுத்தாமல் தன்னுடைய சுயமரியாதை மிகவும் பாதிக்கப்படுவதாகவும் அதற்கு ஒரு நபர்தான் காரணம் என்றும் சக தொகுப்பாளினி பிரியங்காவை குறிப்பிட்டு மறைமுகமாக பேசியிருந்தார் மணிமேகலை.

இதிலிருந்தே மணி மேகலை மீது ஒட்டுமொத்த மீடியாவும் திரும்பியது. ஆனால் இதுவரை பிரியங்காவிடம் இருந்து எந்தவொரு அறிக்கையும் வெளியாகவில்லை. ஆனால் பிரியங்காவிற்கு ஆதரவாக விஜய் டிவி பிரபலங்கள் சில பேர் பேசி வருகிறார்கள். இருந்தாலும் பிரியங்காவிற்கு ஆதரவாக இறங்கியவர்கள் அவருக்கு நண்பர்கள்தான் ஒரு வகையில்.

இது நாட்டுக்கு முக்கியமான விஷயமா என்றால் இல்லைதான். ஆனால் இதை பற்றி நாளுக்கு நாள் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டேதான் வருகின்றன. இன்னொரு பக்கம் பிரியங்காவுக்கு ஏன் சம்பந்தப்பட்ட நிர்வாகம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்றும் பேசி வருகிறார்கள்.

மணிமேகலையின் அறிக்கையை பார்த்ததுமே பல பிரபலங்கள் தைரியமான பெண்மணி, சுயமரியாதையை விட்டுவிட்டு வேலை பார்க்க முடியாது என்றெல்லாம் கமெண்டில் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் மணி மேகலை மீண்டும் ஒரு புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

ஒரு கோயில் கோபுரத்தை போட்டு ஆண்டவனுக்கு மட்டுமே தலைவணங்கு என்று ஆங்கிலத்தில் ஒரு கேப்ஷனையும் சேர்த்து பதிவிட்டிருக்கிறார் மணிமேகலை. அதுவுடன் self respect என டேக் போட்டு அந்தப் படத்தை வெளியிட்டிருக்கிறார் மணி மேகலை.



 அதாவது ஆண்டவனை தவிர வேறு யாருக்கும் நீ அடிபணிய தேவையில்லை என்பதை இந்த புகைப்படம் மூலம் உணர்த்த வருகிறார் மணிமேகலை. மணி மேகலை ஒரு பக்கம் பிரபலமான தொகுப்பாளினி என்றாலும் இந்த பிரச்சினையால் மீண்டும் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதனால் விஜய் டிவிக்கு போட்டி சேனலாக இருக்கும் சன் டிவி ஒரு வேளை மணி மேகலை தன் பக்கம் இழுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News