எத்தனை இயக்குனர்கள் வந்தாலும் சரி... சளைக்காமல் போட்டி.. மணிரத்னம் வெற்றியின் ரகசியம் இதுதான்..!
80களில் தமிழ்த்திரை உலகில் பாலசந்தர், பாரதிராஜா பிசியாக இயக்கிக் கொண்டு இருந்தனர். அப்போதும் பிசியாக இயங்கிக் கொண்டு இருந்தவர் மணிரத்னம்.
இவரது முதல் படம் பகல் நிலவு. கமலுடன் இணைந்து நாயகன் படத்தை இயக்கினார். அது பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அதன்பிறகு அவருடைய படங்கள் எல்லாமே வெற்றி தான். தளபதி, அஞ்சலி, கன்னத்தில் முத்தமிட்டால், ராவணன், அக்னி நட்சத்திரம், செக்கச் சிவந்த வானம், பொன்னியின் செல்வன்1, 2 இப்போது தக் லைஃப் என இவரது படங்கள் எல்லாமே பேசும் வகையில் உள்ளன. இவரது படங்களின் தனித்துவம் என்றால் அது லைட்டிங் தான்.
ஷங்கர், கே.எஸ்.ரவிகுமார், சேரன் போன்ற இயக்குனர்கள் வெற்றிகரமாக படங்களை இயக்கி வந்தனர். அப்போதும் மணிரத்னம் படங்களை இயக்கினார். அதே போல விஷ்ணுவர்த்தன், செல்வராகவன், மிஷ்கின், எஸ்.ஜே.சூர்யா படங்களை இயக்கினர். அப்போதும் மணிரத்னம் ட்ரெண்டில் தான் இருந்தார்.
இப்போது லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ் என்று இளம் டைரக்டர்கள் வந்து விட்டனர். இப்போதும் இவரது படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான் கமல், சிம்பு நடிக்கும் தக் லைஃப்.
ஒரு காலத்தில் ரஜினி, கமலை வைத்து சிறப்பான படங்களைக் கொடுத்தவர் தான் மணிரத்னம். அதிலும் கமலை வைத்து இவர் இயக்கிய நாயகன் படம் இருவரது வாழ்விலும் ஒரு மைல் கல்லாகவே அமைந்தன.
காலங்கள் மாறினாலும், தலைமுறைகள் மாறினாலும் தனக்கென ஒரு தனி பாணி என வெற்றிகரமாக திரை உலகில் உலா வருகிறார் மணிரத்னம். இந்த வெற்றியின் ரகசியம் என்னன்னு அவரிடமே கேட்கப்பட்ட போது அவர் அளித்த பதில் இதுதான்.
ஒரு படம் முடிச்ச உடனே அதன் வெற்றி தோல்வி பற்றி பெருசா அலட்டிக்க மாட்டேன். உடனே அடுத்த படத்துக்கான வேலையை ஆரம்பிச்சிடுவேன் என்று கூலாகப் பதில் சொல்கிறார். அதுதான் மணிரத்னம்.