அஜித்துடன் போட்டி போட தயாரான சூர்யா! இத யாருமே எதிர்பார்க்கலையே

சூர்யா 44 அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாகுவதாக தகவல்

By :  rohini
Update: 2024-09-21 11:49 GMT

கிட்டத்தட்ட 90களின் ஆரம்பத்தில் இருந்தே அஜித் விஜய் என்ற போட்டிதான் கோலிவுட்டில் நிலவி வந்தது. அந்தளவுக்கு விஜயும் அஜித்தும் அவர்கள் இடத்தை தக்கவைத்துக் கொள்ள கடுமையாக போராடி வந்தனர். அந்த போராட்டம் தான் இன்று அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறது. அஜித்தை பொறுத்தவரைக்கும் காசு சம்பாதிக்கதான் சினிமாவிற்கே வந்தேன் என்று ஒரு பழைய பேட்டியில் கூறியிருப்பார்.

ஆனால் அவரே அறியாமல் மாபெரும் வளர்ச்சியை அடைந்திருக்கிறார். விஜயிடம் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. அதனால்தான் ஆரம்பத்த்தில் தன்னை பற்றி பத்திரிக்கைகளில் விமர்சித்ததை அப்படியே தன் அறையில் வைத்து அதை பார்த்துபார்த்து தன்னையே மெருகேற்றுவாராம். இதுவும் ஒரு பழைய பேட்டியில் வந்திருக்கிறது.

இருவருமே மனதில் ஒரு தீர்க்கமான எண்ணம் கொண்டுதான் இந்த சினிமாவில் காலெடி எடுத்து வைத்திருக்கின்றனர். ரஜினி கமலுக்கு பிறகு அதே மாதிரியான பேரையும் புகழையும் பெற்ற நடிகர்களாக விஜயும் அஜித்தும் தான் இருக்கிறார்கள் .இதனிடையில் விஜய் அரசியலுக்கு போக இருப்பதால் அந்த இடம் வெற்றிடமாகத்தான் இருக்கும்.

போட்டியாளர்களை பொறுத்தவரைக்கும் தனக்கு சமமான ஒரு போட்டியாளர் இருக்கிற வரைக்கும்தான் மற்ற போட்டியாளரால் ஓட முடியும். இல்லாவிட்டால் அவருடைய முயற்சியிலும் தொய்வு ஏற்பட்டுவிடும். அதே போல்தான் அஜித்தின் நிலைமையும் . ஆனால் அவர் போட்டியை விரும்பாதவராய் இருந்தாலும் ரசிகர்கள் விடமாட்டார்கள்.

விஜய் அஜித் இவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் சூர்யா. அதனால் விஜய் இடத்தில் சூர்யாதான் வருவார் என்று சொல்லி வருகிறார்கள். அதை உறுதிப்படுத்துவகையில் சூர்யா இப்போது நடித்துக் கொண்டிருக்கும் சூர்யா 44 திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸ் என்று சொல்லப்பட்டு வருகிறது.

அதே பொங்கலில்தான் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாகிறது. ரஜினிக்காக கங்குவா திரைப்படத்தை விட்டுக் கொடுத்த சூர்யா குட் பேட் அக்லிக்காக சூர்யா 44 திரைப்படத்தை நிச்சயமாக விட்டுக் கொடுக்கமாட்டார். அதனால் பொங்கல் சரியான போட்டியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News