இளையராஜா மாதிரி உலகத்துலயே ஆள் கிடையாது... அது ஏன்னு தெரியுமா? தயாரிப்பாளர் சொன்னதைப் பாருங்க...
இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவுக்குள் அன்னக்கிளி படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தார். அன்று முதல் இன்று வரை அவர் போட்ட பல பாடல்கள் காலத்தால் அழியாதவை. 80ஸ் குட்டீஸ் முதல் 2கே குட்டீஸ் வரை அவரது பாடல்களை ரசித்துக் கேட்கின்றனர். அந்தளவுக்கு அவர் இசை சாம்ராஜ்யம் நடத்தி வருகிறார்.
இப்போதும் அவர் தமிழகம் எங்கும் பல இடங்களில் இன்னிசைக் கச்சேரிகளை நடத்தி ரசிகர்களை வியக்க வைக்கிறார். இவரைப் பற்றியும், தமிழ்த்திரை உலகம் குறித்தும் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு என்ன சொல்றாருன்னு பாருங்க...
லோகேஷ் கனகராஜ் கூலி படம் பண்ணும்போது அமீர்கான் அந்தப் படத்தை சிலாகிச்சிப் பேசுறாரு. அவருக்கும் அடுத்த படத்தை லோகேஷ் பண்ணப் போறதா சொல்றாங்கன்னு ஆங்கர் கேட்கிறார். அதற்கு பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கர் மூவீஸ் பாலாஜி என்ன சொல்றாருன்னு பாருங்க.
தமிழ்த்திரை உலகில் நிறைய டேலன்டட் டைரக்டர்ஸ் இருந்துருக்காங்க. உதாரணத்துக்கு இளையராஜாவை மாதிரி இசை அமைப்பாளர் எந்த இன்டஸ்ட்ரியிலுமே கிடையாது. எங்கே தேடுனாலும் கிடைக்க மாட்டாங்க. உலகத்துல தேடுனாலும் கிடைக்க மாட்டாங்க. அத்தனை வெரைட்டீஸ்களை இளையராஜா கொடுத்துருக்காரு.
அதுக்கு அப்புறம் ஏஆர்.ரகுமான். ஆஸ்கர் விருது வாங்குற அளவுக்குப் பேரு பெற்ற இசை அமைப்பாளரா வந்தாரு. அவரும் தமிழ்த்திரை உலகில் இருந்து வந்தவருதான். தமிழ்த்திரை உலகம் அதன் படைப்புகளிலும் என்னைக்குமே தரமாகத் தான் இருந்துருக்கு.
மசாலா படங்கள் எல்லாம் ஒரு காலகட்டத்தில் வரத்தான் செய்யும். அதைத் தவிர்க்க முடியாது. சாமி படங்கள், பேய் படங்கள்னு வேற வேற ஜானர்ல வரத்தான் செய்யும். ஆனா அந்தப் படங்களோட குவாலிட்டி, அதுல உள்ள நேர்த்தி, டெக்னிக்கல் அட்வான்ஸ்டுன்னு பார்த்தா தமிழ்த்திரை உலகத்துல நிறைய பேர் இருந்துருப்பாங்க என்கிறார் பாலாஜி பிரபு.