சிங்கப்பெண்ணே: ஆனந்திக்கு செக் வைத்த யாழினி... இனி அவ்ளோதானா அன்புவோட காதல்?
சிங்கப்பெண்ணே தொடரில் இன்று நடந்தது என்ன என்பதன் கதைச்சுருக்கத்தைப் பார்க்கலாம். வார்டன் 'நீங்க எல்லாருமே என்னை அம்மாவாத் தான் நினைக்கிறீங்களா? நான் சொல்றது எல்லாம் நல்லதுக்குத் தான்னு நீங்க புரிஞ்சிக்கிட்டா என்னை அம்மாவா நினைக்கிறீங்கன்னு அர்த்தம். இல்ல தப்பா தான் நினைப்பீங்கன்னா அவங்களுக்காக இதை சொல்றேன்னு நினைச்சா அது உங்களுக்காகத் தான்.
எந்த பிரச்சனை என்றாலும் தைரியமா எங்கிட்ட சொல்லுங்க. உங்க கூட இருக்குறவங்க கிட்ட சொல்லுங்க. உங்களுக்கு பிரச்சனையை சொல்லத் தயக்கம்னா உங்களை விட வயசுல நான் பெரியவ. அதனால தயங்காம எங்கிட்ட சொல்லலாம். நான் என்ன தான் ஸ்ட்ரிக்டா இருந்தாலும் உங்க அம்மாகிட்ட பகிர்ந்துக்க முடியாத விஷயத்தை இந்த மனோன்மணிக்கிட்ட பகிர்ந்துக்க முடியும். நான் உங்களுக்கு ஒரு ப்ரண்டா, அம்மாவா இருப்பேன்' என்கிறார் வார்டன்.
'மேடம் நீங்க சொல்றதைப் பார்த்தா யாரோ மறைக்கிறாங்கன்னு தெரியுது என மித்ராவின் தோழி சொல்கிறாள். மித்ராவோ யாருக்கோ மறைமுகமா அட்வைஸ் பண்ற மாதிரி தெரியுது. ஒருவேளை ஆனந்தியை மனசுல வச்சிக்கிட்டு சொல்றாங்களோன்னு மித்ரா நினைக்கிறாள். தப்பு பண்றது மனுஷனுக்கு இயல்பு. ஆனா அதை சரி பண்றதுக்குத் தான் அவனோட புத்திசாலித்தனம். எனக்கு மெசேஜ் போடுங்க. எங்கூட பேசணும்னு.
நான் உங்க பிரச்சனை எப்பேர்ப்பட்டதா இருந்தாலும் தீர்க்குறேன்'னு சொல்லி அனுப்புகிறாள் வார்டன். கடைசியாக ரெஜினாவை மட்டும் இருக்கச் சொல்கிறார வார்டன். 'உங்க ரூம்ல நாலு பேரும் எப்படி ப்ராப்ளம் இல்லாமப் போகுதா? ஆமான்னு சொல்கிறாள் ரெஜினா. உங்க நாலு பேருமே எப்பவும் எனக்கு ஸ்பெஷல்தான். உங்களுக்குள்ள ஏதாவது பிராப்ளம் இருந்தா யாரும் எதுவும் எங்கிட்ட வந்து சொல்லலாம். ப்ராப்ளம் இருந்தா கண்டிப்பா சொல்லுங்க'ன்னு சொல்கிறார் வார்டன்.
அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல மேடம்னு சொல்லி விட்டு வருகிறாள் ரெஜினா. நல்லவேளை ஆனந்தி நீ நேத்து பாத்ரூம்ல இருந்து வெளியே வரல. இல்லன்னா உங்கிட்ட சந்தேகப்பட்டுருப்பாங்க. உன் மேல அவங்களுக்கு அவ்ளோ அக்கறை இருக்கு. உனக்கு எந்தப் பிரச்சனையா இருந்தாலும் அவங்க பார்த்துக்குவாங்கன்னு தோணுது. சொல்லலாமான்னு ரெஜினா கேட்க, அக்காவோட கல்யாணம் முடிகிற வரைக்கும் யாரும் எதுவும் சொல்ல வேணாம்னு ஆனந்தி சொல்லி விடுகிறாள். ஆனந்தியைப் பார்க்க ஆஸ்டலுக்கு யாழினி வருகிறாள்.
ஆனந்தி 'வா யாழினி நீ மட்டும்தான் வந்துருக்கியா'ன்னு கேட்கிறாள். 'வேற யாரு வரணும்னு எதிர்பார்க்குற'ன்னு கேட்கிறாள் யாழினி. 'முடிவை சொல்லிட்டுப் போகத் தான் வந்தேன்'னு யாழினி சொல்கிறாள். 'நீங்க அன்னைக்கு வேற ஒரு பொண்ணைக் கட்டி வச்சிக்கோங்கன்னு சொன்னீங்களே. உள்மனசுல இருந்துதான் சொன்னீங்களா? இல்ல அண்ணா வேணான்னு முடிவு பண்ணிட்டீங்களா'ன்னு கேட்கிறாள். 'நான் முடிவு பண்ணல. விதி முடிவு பண்ணிட்டு'ன்னு சொல்கிறாள் ஆனந்தி.
'இந்தப் பொடி வச்சி எல்லாம் இப்படி பேசாதீங்க. எங்க அண்ணா வேணாம்னு நீங்க முடிவு பண்ணினது தெளிவானதுதானே'ன்னு கேட்கிறாள் யாழினி. 'ஏன் இப்படி கேட்குறீங்க? என்ன முடிவு'ன்னு ஆனந்தி கேட்கிறாள். '3 மாசத்துல அம்மா அண்ணனுக்கு கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டாங்க. அத்தைப் பொண்ணு துளசியை அண்ணாவுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவு பண்ணிட்டாங்க'.
'என்ன யாழினி இப்படி ஒரு முடிவு எடுத்துருக்கீங்க?'ன்னு காயத்ரி கேட்கிறாள். 'இது எங்க அம்மா எடுத்த முடிவு' என்கிறாள். 'என் அண்ணன் நிம்மதியா வேலை பார்த்துக்கிட்டு இருந்தான். நீங்க அவன் வாழ்க்கையில வந்து அவன் நிம்மதியை மட்டுமல்ல. எங்க நிம்மதியையும் கெடுத்துட்டீங்க' என்கிறாள் யாழினி. அப்போது 'நீங்க முடிவு எடுத்துட்டீங்க. அதுக்கு அன்பு அண்ணன் முடிவு எடுக்கணும்ல'ன்னு சௌந்தர்யா கேட்கிறாள். 'அண்ணனை எப்படி சம்மதிக்க வைக்கணும்னு எங்களுக்குத் தெரியும்'னு யாழினி சொல்கிறாள்.
'அவன் விருப்பத்துக்காக பல விஷயத்தை நாங்க செஞ்சிட்டோம். ஆனா இப்ப அவன் விருப்பத்தை விட அவன்தான் எங்களுக்கு முக்கியம் 'என்கிறாள் யாழினி. 'அன்னைக்கு அவங்களுக்குப் பாசம் இருந்தா ஓடி வந்து எங்க அண்ணாவை ஆஸ்பிட்டலுக்கு வந்து பார்த்துருப்பாங்க. நேத்து வரைக்கும் நீங்க பதற்றத்துல சொல்றீங்கன்னு நினைச்சேன்.
ஆனா நீங்க ஆஸ்பிட்டலுக்கு வரலன்னதும் எங்களுக்குத் தெளிவாயிடுச்சு. இனி எந்தக் காரணத்துக்காகவும் எங்க அண்ணாவைப் பார்க்கவோ, பேசவோ வரக்கூடாது. இனி தயவு செஞ்சு எங்க அண்ணா முன்னாடி வந்து நின்றுடாதீங்க. முடியலையா. இந்த ஊரை விட்டே போயிடுங்க. எங்க அண்ணா வாழ்க்கையை விட்டுப் போயிடுங்க'ன்னு சொல்கிறாள் யாழினி.
'எங்க அக்கா கல்யாணம் முடிகிற வரை நான் வேலை செய்ய வேண்டிய சூழல்ல இருக்கேன். நீங்க தாராளமா துளசிக்கும், உங்க அண்ணாவுக்கும் கல்யாணம் பண்ணி வைங்க. இந்த ஆனந்தி குறுக்கே நிக்க மாட்டாள். இதுதான் நடக்கணும்னு நினைச்சா அதுதான் நடந்துருக்கு. அன்புவாவது சந்தோஷமா இருக்கட்டும்'னு ஆனந்தி சொல்கிறாள். 'ரொம்ப சந்தோஷம்'னு யாழினியும் கையெடுத்துக் கும்பிடுகிறாள். 'இனிமே என் அண்ணா வாழ்க்கையில நீங்க இல்ல'ன்னு சொல்லிவிட்டு யாழினி செல்கிறாள். ஆனந்தி மனதுக்குள் அழுகையுடன் பார்க்கிறாள்.
திருமூர்த்திக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கணும்னு உறுதியா இருந்தேன்னு லாயர் சத்யா சொல்கிறாள். அதற்கு மகேஷின் அப்பா இன்னும் கொஞ்ச நாள் தங்கிப் போகலாமேன்னு சொல்கிறாள். மகேஷின் அம்மா பார்வதியிடம் 'மகேஷை எங்கே?'ன்னு சத்யா கேட்கிறாள். மகேஷ் அவன் ரூம்ல இருக்கான்னு சொல்கிறாள் பார்வதி.
அப்புறம் சத்யா நானே போய் பார்த்து பேசிட்டு வருகிறேன்னு சொல்லி அவனைப் பார்க்கச் செல்கிறாள். மகேஷ் அழகனைப் பற்றியும், ஆனந்தி பற்றியும் நினைத்துப் பார்க்கிறான். நான் கோவைக்குப் போகிறேன்னு சத்யா சொல்கிறாள். திருமூர்த்தி எங்கே இருந்தாலும் நான் கண்டுபிடிக்கிறேன்னு மகேஷ் சொல்கிறான். மித்ரா சின்ன வயசுல இருந்தே உன்னை விரும்பிருக்கா. அவள் தன் லவ்வை வெளியே சொல்லாம இருந்துருக்கா. அதை ஓப்பனா சொல்ல முடியாத சூழல்ல அவள் இருந்துருக்கா. அதுக்கு நானும் ஒரு காரணம்.
அரவிந்துக்கும் அவனுக்கும் கல்யாணம்னு சொன்னபோது கூட எதையும் சொல்ல முடியாம இருந்துருக்கா. மகேஷ் யதார்த்தத்தை நாம அப்படியே ஏத்துக்கறதுதான் நல்லது. நாம அமைஞ்ச வாழ்க்கை கிடைக்கலன்னா நாம அமைச்சிக்கிடறதுதான் புத்திசாலித்தனம். 'அதுக்கெல்லாம் நான் இன்னும் தயாரா ஆகல ஆன்ட்டி'ன்னு மகேஷ் சொல்கிறான். 'நீ கண்டிப்பா நல்ல முடிவை எடுப்பேன்னு நான் நம்புறேன்' என்கிறாள் சத்யா.