நாடி நரம்பெல்லாம் சிலிர்த்து.. ‘தக் லைஃப்’ பாடல் குறித்து செல்வராகவன் போட்ட பதிவு
kamal
பெரும் எதிர்பார்ப்பில் வெளியானது தக் லைப் திரைப்படம். மணிரத்தினம் இயக்கத்தில் கமல், சிம்பு ,அசோக்செல்வன், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் போன்ற பல நடிகர்கள் நடித்து வெளியான திரைப்படம் தான் தக் லைஃப். 37 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கமல் மணிரத்னம் கூட்டணியில் உருவான இந்த படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா இல்லையா என்றால் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். படம் பார்த்த அனைவரும் படத்தின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். குறிப்பாக இது மணிரத்னம் படமே கிடையாது என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள். மணிரத்தினத்திற்கு என ஒரு தனி டெம்ப்ளேட் இருக்கிறது.
அது இந்த படத்தில் தெரியவே இல்லை என்றும் கூறி வருகிறார்கள். அவருடைய படங்களை எடுத்துப் பார்த்தோமானால் வன்முறை என்பது பெரிதாக இருக்காது. ஆனால் இந்த படத்தை பொருத்தவரைக்கும் வன்முறை காட்சிகள் தான் அதிகமாகவே காணப்படுகின்றது. இது கமலுக்கு லாபத்தை தந்தாலும் எதிர்பார்த்த வசூலை இந்த படம் பெறவில்லை. படத்தில் பெரிய பிளஸ் என்னவென்றால் படத்தில் அமைந்த பாடல்கள் தான்.
மூன்று பாடல்கள் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக முத்தமழை பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்தப் பாடலை சின்மயி பாட அவருடைய குரலில் கேட்பதற்கு மிக அற்புதமாக இருந்தது. படத்தில் இந்த பாடலை பாடியவர் பாடகி தீ. இசை வெளியீட்டு விழா அன்று அவர் ஊரில் இல்லாததால் அவருக்கு பதிலாக சின்மயி மேடையில் இந்த பாடலை பாடினார்.
அவருடைய குரலில் இந்தப் பாடலைக் கேட்ட அனைவருமே மெய்மறந்து போய்விட்டனர். அதிலிருந்து சமூக வலைதளங்களில் சின்மயி மிகவும் ட்ரெண்டிங் ஆக மாறினார் .இந்த நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் முத்தமழை பாடல் பற்றி தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.ஒரு பாடல் கேட்டு நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப் போய் உயிரில் மின்சாரம் பாய்ந்து கேட்டது முதல் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இதெல்லாம் உலகில் ஒரே மனிதனால். நம் ஏஆர் ரஹ்மான் அவர்களால் மட்டுமே முடியும் என முத்த மழை பாடல் பற்றி பதிவிட்டிருக்கிறார்.