ரஜினி அப்படிக் கூப்பிட்டதும் பேச்சே வரல... வேட்டையன் நடிகரோட குஷிக்கு அளவே இல்ல..!

வேட்டையன் ரசிகர்களின் உள்ளங்களை வேட்டையாட வருகிறார்...!

By :  sankaran
Update: 2024-10-05 07:00 GMT

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க செம மாஸாக தயாராகி வரும் படம் வேட்டையன். இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப்பச்சன், பகத்பாசில், மஞ்சுவாரியர் மற்றும் ரித்திகாசிங் உள்பட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் ஆடியோ லாஞ்சும், டிரைலரும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து விட்டது. அதனால் ரசிகர்கள் படத்தின் ரிலீஸ்சுக்காக ஆவலுடன் காத்துள்ளனர். படத்தில் அனிருத் இசை அமைத்துள்ளார். பாடலில் மனசிலாயோ ரொம்பவே பாப்புலராகி விட்டது.

அது தான் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. அதே போல படத்திற்கான புரொமோஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்போது படத்தில் நடித்த ஒரு நடிகர் ரஜினியுடன் நடித்த அனுபவத்தைப் பற்றி பரவசமாகப் பகிர்ந்துள்ளார். அவர் யார், என்ன சொல்லி இருக்கிறார்னு பார்ப்போம்.


வேட்டையன் படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள அவரது பெயர் சாபுமோன் அப்துசமத். இவர் சொல்வது இதுதான். படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஞானவேல் என்னை ரஜினி சாருடன் அறிமுகப்படுத்தினார். அப்போது ரஜினிகாந்த் எழுந்து நின்று சார் என்று அழைத்தார். நான் திகைத்துப் போனேன்.

எனக்கு பேச்சை வரவில்லை. பின்னர் என் தோளை தட்டி ஆறுதல் கூறினார். அப்போதுதான் புரிந்தது. தமிழ் மக்கள் மனதில் இவ்வளவு பெரிய இடத்தை எப்படி பிடித்தார் என்று. இது உண்மையிலேயே என் வாழ்க்கையில் சிறந்த தருணம் என்று பதிவிட்டுள்ளார் நடிகர் சாபுமோன் அப்துசமத். இவர் ஒரு மலையாள நடிகர். அங்கு மோகன்லால் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரஜினியைப் பொருத்தவரை பழகுவதற்கு எளிமையானவர். இனிமையானவர். தன்னுடன் நடிக்கும் நடிகர்களில் பெரியவர், சின்னவர் என பார்க்க மாட்டார். அனைவரிடமும் ஒரே மாதிரியாகப் பழகுவார். அந்த வகையில் தான் இவருடனும் பழகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்டையன் படம் வரும் 10ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இது தசரா திருநாளையொட்டி வெளிவர உள்ளதால் இப்போதே ரசிகர்கள் படத்தைக் கொண்டாடத் தயாராகி விட்டனர்.

Tags:    

Similar News