விடாமுயற்சிக்கு இப்ப வாய்ப்பே இல்ல! எல்லாம் கூடி வர நேரத்துல இப்படி பண்ணா எப்படி?

குட் பேட் அக்லிதான் முதலில் ரிலீஸாகவுள்ளதாக தகவல்

By :  rohini
Update: 2024-09-20 10:31 GMT

கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக ஒரு படத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தான். எத்தனையோ திரைப்படங்கள் எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆக முடியாமல் பத்திரமாக கருவூலத்தில் பூட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சினிமாவில் ஒரு பெரிய நடிகர் அதுவும் அஜித் படம் எனும் போதுதான் இவ்ளோப் பெரிய ஹைப்.

ஆரம்பத்தில் இருந்தே இந்தப் படத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள். விக்னேஷ் சிவனில் இருந்து ஆரம்பித்து இப்போது லைக்காவில் பிரச்சினை என்ற வகையில் படம் சிக்கிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டாலும் படத்தின் ரிலீஸ் தேதியை இன்னும் படக்குழு லாக் செய்யவில்லை.

தீபாவளிக்கு ரிலீஸ் செய்து விடலாம் என்று தான் எண்ணியிருந்தார்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் தீபாவளிக்கும் படம் வெளியாகாது என்றூ தெரிகிறது. சரி டிசம்பர் 10 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

இப்போது டிசம்பரிலும் படம் வருவதற்கு வாய்ப்பே இல்லையாம். அதற்கு காரணம் மகிழ்திருமேனிதான் என்று சொல்கிறார்கள். ஏனெனில் பொதுவாக மகிழ்திருமேனி பற்றி சினிமாவில் ஒரு பேர் இருக்கிறது. எந்த படம் எடுத்தாலும் அதில் பெர்ஃபெக்‌ஷன் பார்க்கிறவர் மகிழ்திருமேனி என்றுதான் சொல்வார்கள்.

அதே மாதிரிதான் விடாமுயற்சி படத்திலும் நிறையவே பெர்ஃபெக்‌ஷன் பார்த்துக் கொண்டிருக்கிறாராம். ஆனால் படம் தரமாக இருக்கப் போகிறது என்றும் சொல்கிறார்கள். இதனாலயே டிசம்பரிலும் படம் வராது என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் பொங்கலுக்கு கொண்டு வந்துவிடலாம் என்றால் அங்கு குட் பேட் அக்லி திரைப்படம் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது. அதனால் குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸுக்கு பின்னாடிதான் விடாமுயற்சி திரைப்படமும் வெளியாகும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News