படமே நடிக்க வேண்டாம்!.. இப்டி போட்டோ போட்டா போதும்!.. இளசுகளை ஏங்க வைக்கும் சமந்தா!...

By :  MURUGAN
Published On 2025-05-27 08:31 IST   |   Updated On 2025-05-27 08:31:00 IST

Actress Samantha: சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் சமந்தா. மாஸ்கோவின் காவேரி என்கிற படத்தில் நடிக்க துவங்கினார். அதன்பின் தமிழ், தெலுங்கு என ரவுண்டு கட்டி நடித்தார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகள் பேசுவார். இதனால், தெலுங்கில் இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்தது.


தமிழ் சினிமாவில் நடித்து வந்தாலும் அதிகம் நடித்தது டோலிவுட்டில்தான். விஜயுடன் தெறி, மெர்சல், கத்தி போன்ற படங்களில் நடித்தார். மேலும், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ் போன்றவர்களுடனும் நடித்தார். தமிழில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார்.


மிகவும் திறமையான நடிகர் இவர். கவுதம் மேனன் இயக்கிய நீதானே என் பொன் வசந்தம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், அந்த படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. அதே கவுதம் மேனன் தமிழில் இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். அப்போது நாக சைத்தன்யாவுடன் காதல் ஏற்பட்டது.


சில வருடங்கள் காதலித்துவிட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர். நாகார்ஜூன் குடும்பம் இவருக்கு பல கோடிகள் ஜீவனாம்சமாக கொடுக்க முன் வந்தும் அதை மறுத்துவிட்டார். இந்த விவகாரத்தில் ஆணாதிக்க மனநிலை கொண்ட பலரும் சமந்தாவை பற்றி தவறாக பேசினார்கள். அவற்றையெல்லாம் கடந்த சினிமாவில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்த துவங்கினார்.


கடந்த சில வருடங்களில் சமந்தா அதிக படங்களில் நடிக்கவில்லை. ஆனால், அவரை பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. மேலும், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளை ஏங்க வைத்திருக்கிறது.



 



Tags:    

Similar News