மீனாவை கொல்ல பிளான் பண்ணும் சிட்டி… கடுப்பில் இருக்கும் கோபி… கோபத்தில் கத்தும் ராஜி…

விஜய் டிவி பிரபல தொடர்களின் தொகுப்பு

By :  Akhilan
Update: 2024-09-21 05:42 GMT

VijayTv: சிறகடிக்க ஆசை தொடரில் மீனா மற்றும் முத்து இருவரும் பூ கொடுக்க வேண்டிய இடங்களில் கொடுத்துவிட்டு பைக்கில் சென்று கொண்டிருக்கிறனர். சிட்டி சத்யாவை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் டீ குடித்து கொண்டிருக்க அதற்கு சிட்டி தன் ஆளை அனுப்பி காசு கொடுக்கக் கூறுகிறார்.

ஆனால் அதற்கு சத்யா மறுத்து விட கடுப்பில் கிளம்பி விடுகிறார். ரோட்டில் முத்து மற்றும் மீனா சந்தோஷமாக இருப்பதை பார்த்த சிட்டி அவர்களை காரை விட்டு இடிக்க கூறுகிறார். ஆனால் முத்து சுதாரித்துக் கொண்டு நகர்ந்துவிட கார் சென்று விடுகிறது. பின்னர் செருப்பு தைக்கும் தாத்தா மற்றும் பாட்டியை பார்த்துவிட்டு செல்கின்றனர். சிட்டி ரோகிணிக்கு கால் செய்து வீடியோவை உடனே எடுக்க வேண்டும் என மிரட்டி விட்டு வைக்கிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் கோபி மற்றும் ஈஸ்வரி பேசிக் கொண்டிருக்க உங்கள வெறுக்கிறேன் என்கிறார் கோபி. ஆனால் ஈஸ்வரி நினைப்பதற்கே ஒரு உறவு வேண்டும். நீ அதில் கூட எனக்கு இல்லை என அதிர்ச்சி கொடுத்து செல்கிறார். ரெஸ்டாரண்டில் பாக்கியா வேலை செய்து கொண்டிருக்க அங்கு வரும் பழனிச்சாமி நீங்களே எல்லா வேலையும் செய்ய வேண்டாம்.

ஒரு செப்பை வேலைக்கு வைத்துக் கொள்ளுங்கள் என அறிவுரை சொல்லிவிட்டு செல்கிறார்.வீட்டிற்கு வரும் கோபி ராதிகாவிடம் ஈஸ்வரி பேசியதை கூறுகிறார். உங்கள மதிக்காத இடத்துக்கு நீங்க எதுக்கு போறீங்க. இனிமே போக மாட்டேன் என் குடும்பம் இனிமேல் எனக்கு தேவையில்லை. ஆனால் அதை பாக்யாவை சும்மா விடமாட்டேன் என கூறுகிறார். ராதிகா இது நமக்கு தேவையில்லாத விஷயம் எனக்கூறி விட்டு உள்ளே செல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் ராஜி கதிரிடம் இனி என் தேவைக்கு நான் வேலைக்கு போய் சம்பாரித்துக் கொள்வேன் என பேசி சம்மதம் வாங்குகிறார். வீட்டிற்கு வரும் அவரை கோமதி உள்ளே அழைத்துச் சென்று விசாரிக்க மாமா கஷ்டப்பட்டபோது உங்களுக்கு இந்த ஆசை இருந்துச்சு தானே. நானும் இப்ப அதைத்தான் செய்தேன் என்கிறார்.

நீங்கள் தான் மாமா கிட்ட பேசி நான் வேலைக்கு போகறதுக்கு சம்மதம் வாங்கி கொடுக்கணும் என ராஜி பேசிக் கொண்டிருக்க அப்பொழுது தங்கமயில் உள்ளே வருகிறார். ஆனால் அவர் விஷயத்தை வெளியில் கசிய விட்டு விடுவார் என மூவரும் அமைதியாகிவிடுகின்றனர். இதை பார்த்த தங்கமயில் சரவணனிடம் சென்று இன்னும் உங்கள் குடும்பத்தில் என்னை தனியாளாக பார்ப்பதாக அழுது கொண்டே சொல்கிறார். பாண்டியன் வந்தவுடன் சம்பள பணத்தை சரவணன் கொடுக்க தங்கமயில் அதிர்ச்சியாக பார்க்கிறார்.,

Tags:    

Similar News