பாக்கியாவை அழிக்க கோபி திட்டம்… ரோகிணியின் நரி வேலை… அழுமூஞ்சியான தங்கமயில்!

விஜய் டிவியின் இன்றைய டாப் சீரியலின் தொகுப்பு

By :  Akhilan
Update: 2024-09-23 05:58 GMT

VijayTv: சிறகடிக்க ஆசை தொடரில் முத்துவின் போனை எடுக்க ரோகிணி திட்டமிடுகிறார். வீடியோவை வெளியில் காட்டிவிட்டால் பிஏ விஷயத்தை சிட்டி பார்த்துப்பான். இவங்களும் கிருஷை தத்தெடுப்பதால் தடுத்திடலாம் என திட்டமிடுகிறார். முத்துவின் போனை எடுக்கும் ரோகிணி, மீனா அங்கு வந்தவுடன் கட்டிலுக்கு அடியில் மறைந்து கொள்கிறார்.

பின்னர் வீடியோவை கண்டுபிடித்துவிட அதை தன்னுடைய மொபைலுக்கு அனுப்பும் போது போன் சுவிட்ச் ஆப் ஆகிவிடுகிறது. இதனால் கடுப்பாகும் ரோகிணி வெளியில் வர பார்க்க அப்போது முத்து மற்றும் மீனா வந்து விடுகின்றனர். திடீரென அவர்கள் போனை தேட டேபிளில் வைத்துவிட்டு இவர் வெளியே வந்து விடுகிறார்.

சூப்பர் மார்க்கெட்டில் ரவி இருக்கும்போது அவருடைய முதலாளி மகள் வருகிறார். அதே ஸ்ருதியின் அம்மா பார்த்து விடுகிறார். பாக்கியலட்சுமி தொடரில் இனியாவை அழைத்துச் செல்ல எழில் மற்றும் ஈஸ்வரி வருகின்றனர். பின்னர் இருவரையும் அழைத்து சென்று ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு எழில் அனுப்பி வைக்கிறார். ராமமூர்த்தியை நினைத்து ஈஸ்வரி புலம்பி கொண்டிருக்கிறார்.

பாக்கியா தன்னுடைய ஹோட்டலுக்கு செப் வேண்டும் என விளம்பரம் கொடுக்க அதை கோபியின் நண்பர் எடுத்து வந்து அவரிடம் காட்டுகிறார். அதை பார்த்த கோபி சரியாக திட்டமிட்டு தன்னுடைய செப்பை பாக்கியாவை பழிவாங்க அந்த ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் சரவணன் வாங்கிய சம்பளத்தை மொத்தமாக பாண்டியனிடம் கொடுக்க தங்கமயில் அதிர்ந்து விடுகிறார். பின்னர் ரூமுக்கு வந்து கொஞ்சமாவது நீங்க எடுத்து வைத்திருக்கலாமே என கேட்க எனக்கு அந்த பழக்கம் இல்லை எனக் குறிப்பிடுகிறார். இதைத்தொடர்ந்து மீனா மற்றும் ராஜி இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

தங்கமயில் சரவணனிடம் தான் அம்மா வீட்டுக்கு செல்வதாக கூறுகிறார். அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டு செல்லுமாறு சரவணன் கூட தங்கமயிலும் சொல்லிவிட்டு அவருடன் வண்டியில் செல்கிறார். வீட்டிற்கு வரும் தங்கமயில் தன் அம்மாவிடம் ராஜி மற்றும் மீனா பேசாமல் இருப்பதையும், மொத்த சம்பளத்தையும் பாண்டியனிடம் சரவணன் கொடுத்ததையும் சொல்லி அழுது கொண்டிருக்கிறார்..

Tags:    

Similar News