‘பாக்யலட்சுமி’ சீரியலுக்கு பிறகு இதான் பண்ணப் போறேன்! கோபி எடுத்த திடீர் முடிவு

பாக்கியலட்சுமி சீரியலுக்கு பிறகு கோபியின் நிலைமை இப்படியா ஆகனும்?

By :  rohini
Update: 2024-09-27 13:41 GMT

விஜய் டிவியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில் புதுப்புது எபிசோடுகளுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் மிகவும் பிரபலமாக பார்க்கப்படுபவர் கோபி என்ற கேரக்டரில் நடித்து வரும் சதீஷ்.

ஆரம்பத்தில் இருந்து இந்த சீரியலை விட்டு விலகப் போகிறேன் என அடிக்கடி கூறி இதன் மூலமே மக்கள் மத்தியில் பிரபலமானார் கோபி என்ற சதீஷ். ஏனெனில் பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு நெகட்டிவ் ஷேடில் கோபியின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

குடும்பப் பெண்களின் ஒட்டுமொத்த கோபத்தையும் பெற்ற கதாபாத்திரமாக இந்த கோபி கதாபாத்திரம் அமைந்திருக்கும் .இவர் எங்கே வெளியே போனாலும் பெண்கள் சூழ்ந்து கொண்டு இவரை திட்டுவதும் அடிக்க வருவதும் என பல வகைகளில் பிரச்சனைகளில் சிக்கி இருக்கிறார் கோபி.

இதனாலையே நான் இந்த சீரியலை விட்டு விலகப் போகிறேன் என அடிக்கடி வீடியோ போட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் .சமீபத்தில் கூட இவர் வீட்டின் முன்பு ஒரு பெண் எலுமிச்சையால் சூனியம் வைத்த ஒரு செய்தி மிகவும் வைரலானது. அந்த அளவுக்கு இவருடைய கதாபாத்திரம் எதிர்மறையாக அமைந்திருக்கும்.

இந்த நிலையில் மீண்டும் கோபி ஒரு வீடியோ போட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார். அதாவது பாக்கியலட்சுமி சீரியலுக்குப் பிறகு இனிமேல் நான் எந்த சீரியலிலும் நடிக்கப் போவதில்லை. ஒரு ஸ்விக்கி ஓட்டுனராகவோ அல்லது வேறு எந்த நிறுவனத்திற்காவது கார் டிரைவராகவோத்தான் நான் போகப் போகிறேன் .

ஆனால் இனிமேல் சீரியலில் நான் நடிக்கவே மாட்டேன் என உறுதியாக கூறிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த அளவுக்கு பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரம் சதீஷை மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.




Tags:    

Similar News