Pandian Stores2: சக்திவேல் குடும்பத்துக்கு செக் வைத்த மீனா… அட அதிரடியா இருக்குப்பா?

By :  AKHILAN
Published On 2025-06-10 09:02 IST   |   Updated On 2025-06-10 09:02:00 IST

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

ராஜி பாண்டியனை பார்க்க கடைக்கு வந்திருக்கிறார். போலீஸ் வேலைக்கு படிக்க வேண்டியது தானே என பாண்டியன் கேட்க அதுதான் உங்களுக்கு பிடிக்காது என்கிறார் ராஜி. எனக்கு பிடிக்கலன்னா நீ செய்ய மாட்டியா என பாண்டியன் கேட்க செய்வேன் தான் என்கிறார்.

என் மேல் ஏதும் கோபம் இல்லையா மாமா உங்களுக்கு என ராஜி கேட்க உன் மேல எனக்கு எதுக்குமா கோபம் என்கிறார் பாண்டியன். இல்ல அரசியை என் அண்ணன் தான கல்யாணம் பண்ணிட்டு போயிருக்கான் அதனால் தான் கேட்பதாக கூறுகிறார். பாண்டியன் அதெல்லாம் ஒன்றும் இல்லை எனக் கூறி வருகிறார்.

முத்துவேல் வீட்டில் இருந்து வீட்டிற்கு வரும் சுகன்யா பழனியை திட்டிக் கொண்டிருக்கிறார். உங்க அண்ணன் எதுவோ நிலம் வாங்கப் போகிறாராம். லட்ச லட்சமாக பணத்தை வீட்டில் வைத்திருப்பதாக சொல்கிறார். இங்க என்ன இருக்கு நம்ம ஏன் இங்க இருக்கோம் என கேட்கிறார். 

 

இதனால் கடுப்பாகும் பழனி இந்த உண்மையான பாசம் வச்சிருக்கவங்க இருக்காங்க என்கிறார். அந்த நேரத்தில் மீனா வர எதற்காக சித்தப்பாவை திட்டிக் கொண்டிருக்கிங்க என கேட்கிறார். இதனால் கடுப்பாகும் சுகன்யா புருஷன் பொண்டாட்டி கூட எதற்காக உள்ள வர என திட்டிவிடுகிறார்.

உடனே பழனி சமாதானப்படுத்தி விட்டு உங்க சித்திக்கு அந்த வீட்டில் நிறைய பணம் இருந்துச்சாம். அதை சொல்லிட்டு இருந்தாள் என்கிறார். அவர் சென்று விட மீனா அமைதியாக விஷயத்தை போட்டு சுகன்யாவிடம் என்ன காசு என்கிறார்.

அவங்க நிலம் வாங்க போறாங்களாம். கையில் அவ்வளோ லட்சம் இருக்குது. தங்க கட்டி கூட இருக்கும் என பெருமூச்சு விட்டு செல்கிறார். இதனால் யோசிக்கும் மீனா உடனே இன்கம்டேக்ஸ் துறைக்கு கால் செய்து சொல்லி விடுகிறார்.

செந்திலை வழியில் சந்திக்கும் மீனாவின் அப்பா தன்னுடைய மாப்பிள்ளையிடம் அந்த பணத்தை கொடுத்தால் வேலை கிடைக்கும் என மறுபடியும் ஆசையை கிளப்பி விடுகிறார். அந்த யோசனையில் செந்தில் வீட்டுக்கு வருகிறார்.

மயில் நியாபகமாக சரவணன் அமர்ந்து இருக்க அவருக்கு கால் வருகிறது. இருந்தும் மயில் என்பதை தெரிந்து கொண்டே எடுக்காமல் விட்டு விடுகிறார். உடனே மயில் மீனாவிற்கு கால் செய்து என்னை மறந்துவிட்டீங்க என சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

கோமதியிடமும் பேச அவர் என்னை நீங்களாம் மிஸ் பண்ணலையா என்கிறார். பின்னர் சரவணன் போன் எடுக்கலை என்பதை சொல்ல மீனா சரவணனிடம் போனை கொடுக்க செல்கிறார். ரூமை தட்டி போனை கொடுக்க மயில் என்னிடம் ஏன் பேசவே மாட்டிங்கிறீங்க மாமா என்கிறார்.

ஆனால் சரவணன் எதேதோ காரணம் சொல்லி போனை வைத்து விட மீனா உங்களுக்கும் அக்காவுக்கும் எதும் சண்டையா எனக் கேட்க அவரிடமும் மழுப்பி சென்று விடுகிறார். இதனால் மீனா யோசனையில் இருக்கிறார்.

Tags:    

Similar News