Siragadikka Aasai: விஜயா மருமகள்களுக்கு கொஞ்சம் அறிவு கம்மிதான் போல… வெறுபேத்திட்டு இருக்காங்களே!

By :  AKHILAN
Published On 2025-06-26 09:06 IST   |   Updated On 2025-06-26 09:06:00 IST

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

ரோகிணியை பொய் சொன்னதுக்காக மீண்டும் விஜயா கன்னாபின்னாவென்று திட்டிக்கொண்டு இருக்கிறார். மனோஜ் சரி விடுமா. நான் மேல படுக்கிறேன். ரோகிணியை கீழே படுக்க சொல்லுறேன் எனக் கூற அவர் வேண்டாம் நீ என் ரூமுக்கு வா அப்பாக்கூட படு என அழைத்து செல்கிறார்.

ரோகிணி கோபத்தில் இருக்கிறார். ஸ்ருதி மறுபடியும் ரெஸ்டாரெண்ட்டின் இண்ட்டிரீயர் குறித்து கேட்கிறார். ஆனால் ரவி எனக்கு இப்போ இது தேவையில்லை எனக் கூற அவர் கடுப்பாகி சண்டை போடுகிறார். பின்னர் இருவரும் ஹெட்செட்டில் பாட்டு கேட்ட ஒரே பாட்டை கேட்பதை தெரிந்து சிரித்து கொள்கின்றனர்.

சீதாவுக்கு மாப்பிள்ளைக்காக ஜாதகம் கொடுத்த இடத்தில் மாப்பிள்ளை எதுவும் இருக்கா எனக் கேட்க முத்து செல்கிறார். அங்கு ஒரு ஜாதகம் இருக்கு இந்த பொண்ணுக்கே செஞ்ச மாதிரி இருக்கும் எனச் சொல்லி மாப்பிள்ளையின் பெயர் அருண் என்கிறார்.

முத்துவின் முகம் மாற அவரோட அம்மாவை வரச்சொல்லி இருக்கேன் எனக் கூற சரியாக அங்கு முத்துவின் அம்மா வருகிறார். உடனே முத்து இந்த கல்யாணம் நடக்காது எனக் கூறி செல்கிறார். ஏமா இவர் இப்படி சொல்றாரு எனக் கூற அந்த பொண்ணை தான் என் பையன் லவ் பண்றான். 

 

இவங்க இரண்டு பேரும் இருக்க பிரச்னை. அதான் இந்த காதலுக்கு ஒத்துக்க மாட்டிங்கிறாரு என்கிறார். செல்வம் அதான் ஜாதகம் பொருத்தம் இருக்கே எனக் கேட்க கடவுளே சொன்னாலும் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கவே மாட்டேன் என்கிறார்.

ஸ்ருதி மீனாவை அழைத்து ரவி இண்டீரியர் டெக்கரேஷனுக்கு ஒத்துக்கவே மாட்டிங்கிறாரு. நீங்க எப்படியாச்சும் கேட்டு சொல்லுங்க என்கிறார். உடனே மீனா ரவி சாப்பிட வரும் போது அவருக்கு பிடிச்ச கலர் என்பதை பேசி கேட்டு கொள்ள ஸ்ருதி தெரிந்து கொள்கிறார். பின்னர் ஸ்ருதி குறித்து ரவி மீனாவிடம் புகார் சொல்கிறார்.

ரோகிணியிடம் விஜயா பணம் எங்க எனக் கேட்க ஒருத்தரிடம் கேட்டு இருக்கேன். ஒரு வாரத்தில் கிடைச்சிடும் என்கிறார் ரோகிணி. அப்போ வித்யா கால் செய்து உடனே உன்னை பார்க்கணும் எனக் கேட்க நான் வித்யாவை பார்க்க போறேன். அவ எனக்கு ஒன்னுனா நோ சொல்ல மாட்டா என மனோஜிடம் சொல்லி செல்கிறார் ரோகிணி.

Tags:    

Similar News